கடந்து வாழுகின்ற சமூகமாக
ஈழத் தமிழினத்தின்
வாழ்வு பரந்துள்ள நிலையில்
தமிழர்களின் இன அடையாளத்தினை பேணிப்பாதுகாப்பதில்
கலையும் ஓர் விடயமாகவுள்ளது. தமீழீழ விடுதலையை நோக்கிய
எமது இனத்தின் விடுதலைப்
போராட்டத்திற்கான மென்வலுவில் கலையும்
ஓர் அம்சமாக விளங்குகின்ற நிலையில்
கலையையும் ஓர் கருவியாக நாம் கவனத்தில்
கொள்கின்ற நிலையுள்ளது.கலைப்பெருவெளியில்
தமிழினத்தில் விடுதலைப்
பெருவிருப்பினை வெளிப்படுத்தி நிற்கும்
கலைவெளிப்பாடுகள் எமது இனத்தின்
விடியலுக்கான மென்வலுவின் சாட்சியமாக
அமையும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்
பிரான்சில் இடம்பெற்றிருந்த மாபெரும்
கலைநிகழ்வாக அமைந்திருந்த
சலங்கை நிகழ்வில்
காணொளிவழியே ஆற்றியிருந்த சிறப்புரையில் தெரிவித்துள்ளார். பிரான்சின் பல முன்னணி ஆசிரியர்கள் மற்றும்
நடனத்துறைசார்
மாணவர்களை பங்கெடுத்திருந்த இப்பெரும் பரத
நிகழ்வினை தமிழர் புனர்வாழ்வுக்கழகம்-
பிரான்சு 13வது தடவையாக
நடாத்தியிருந்தது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக முள்ளிவாய்க்கால்
தமிழினஅழிப்பு நாளான மே-18ம் நாளான
தமிழீழத் தேசியக் துக்க நாளன்று உலகத்
தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ள தமிழீழ
சுதந்திர சாசன உருவாக்கம் தொடர்பிலான
சிறப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. தமிழீழ சுதந்திர சாசன வரைபுக்கான
விளக்ககையேடுகள் மற்றும் மக்கள்
கருத்தறியும் கேள்விக்கொத்துக்கள்
விநியோகிக்கப்பட்டிருந்தன. தமிழீழத் தேசியத்தின்பால்
உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்புக்கள்
பலவும் 2009ம்க்கு ஆண்டுக்கு பின்னர்
நிகழ்வுகளை வெறும் சடங்குகளாக
முன்னெடுத்து வரும் சூழலில் காலத்தின்
தேவை கருதி தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கு உறுதுணை வழங்கியிருந்த
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சின்
செயற்பாடு பல
அமைப்புக்களுக்கு முன்னுதாரணமாக
அமைந்துள்ளதென நா.தமிழீழ அரசாங்கத்தின்
பிரான்சு உறுதுணைக்குழு தனது செய்திக்குற தெரிவித்துள்ளது. எழுச்சியுடன் இடம்பெற்றிருந்த
இந்நிகழ்வு குறித்து தமிழர்
புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு வெளியிட்டுள்ள
ஊடகஅறிக்கiயில் தெரிவிக்கப்பட்டிருந்த சில
குறிப்புகள் : நிருத்தியாலயம் கலைக்கல்லூரி,
ஆடற்கலையகம், சுமித்திரா பரதநாட்டியாலயம்,
நர்த்தன விருக்கா, நர்த்தனாதீரா நடனாலயம்,
கலாபவனம், இவ்ரி சூர் சென் நடனப் பள்ளி,
பொண்டி நடனப் பள்ளி, கவின் கலையகம்
ஆகிய நடனப் பள்ளி மாணவிகள் மற்றும் இசைப் பிரியா நடனக் குழு உட்பட 124 மாணவிகள்
16 நடனங்களை வழங்கி சிறப்பித்தனர். பரதவிழா நிகழ்வின் பிரதான
பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக் கழக
பிரான்ஸ் தலைவர் திரு. த. கோணேஸ்வரன்
அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்
தொடர்ந்து போரினாலும்,
இயற்கை அனர்த்தங்களினாலும் சாவடைந்த மக்களை நினைவு கூர்ந்து அக வணக்கம்
செலுத்தப்பட்டது. மங்கள விளக்குகளை லா கூர்நெவ் தன
லக்ஸ்மி மகால் உரிமையாளர் திரு. பரமானந்தம்,
நடன ஆசிரியைகளான திருமதி.
கஸ்தூரி ஜெகதீபன், திருமதி.
மீரா மங்களேஸ்வரன், திருமதி.
அனுசா மணிவண்ணன், மஞ்சுளா இராஜலிங்கம், ஜி ரிவி பிரான்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.
குருபரன் ஆகியோருடன் நாடுகடந்த தமிழீழ
அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் திரு.
நா. பாலச்சந்திரன், இடம்பெயர்ந்தோர் மற்றும்
அகதிகள் மறுவாழ்வு அரசியல் கைதிகள்
விவகார அமைச்சர் திரு. சி. மகிந்தன் ஆகியோர் ஏற்றிவைத்தனர். வரவேற்புரையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக
பிரான்ஸ் பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல்
அவர்களும் சிறப்புரையினை தமிழர்
புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் சட்ட
ஆலோசகரும், சட்டத்தரணியுமான திரு. ந.
பிரான்சுவா இளங்கோ அவர்களும் நிகழ்த்தினர். நடன ஆசிரியர்களுக்கான
சான்றிதழ்களை வழங்கி பொன்னாடை அணிவித்த
மனோரஞ்சிதம் மனோகரன் அவர்கள்
மான்பேற்றினார். நடனங்களை வழங்கிய நடனப்
பள்ளி மாணவிகளுக்கான சான்றிதழ்களை திரு.
பரமானந்தம், திரு. இளங்கோ, திரு.
ஜெயசூரியர், திரு. தங்கத்துரை, திரு.
சுந்தரவேல், திரு. மகிந்தன், திரு.
செல்வரஞ்சன், திரு. குருபரன், திருமதி. கறோள், திரு. அருளானந்தன், திரு. பரராசா,
திரு. ரவீந்திரன், திரு. பாக்கியநாதன், திரு.
சிவதாசன், திருமதி. சந்திரிக்கா, திரு.
அரியரத்தினம், திரு. சத்தியசீலன் ஆகியேர்
வழங்கி உற்சாகப்படுத்தினர். நன்றியுரையினை கழக உறுப்பினர் திரு. பா.
கிருணகாந்தன் வழங்கினார். நிகழ்ச்சித்
தொகுப்பினை கழக கௌரவ உறுப்பினர்
திரு. த. விநாயகமூர்த்தி அவர்களுடன்
செல்விகள் சுஜிடா மற்றும் நஜித்தா, திரு.
அருள்மொழித்தேவன் ஆகியோர் தொகுத்து வழங்கினார். இந் நிகழ்வு சிறப்புற அருள்சோனோ,
பேபி பலூன், போட்டோ மணி,
5டி எனடர்டெய்மென்ட் வீடியோ குழுவினர்
மற்றும் வர்த்தக ஸ்தாபனத்தினர், கழக
உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள்
உறுதுணைகளை வழங்கினர் என தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊடக அறிக்கையில்
தெரிவிக்கப்பட்ட சில குறிப்புகள்
தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment