Latest News

November 24, 2012

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மக்கள் விடுதலை இயக்கமென உலகெங்கும் நிரூபிப்போம்: நடிகர் ராஜ்கிரண்
by admin - 0

விடுதலைப் புலிகள்
இயக்கத்தை ஒரு மக்கள்
விடுதலை இயக்கம் என
உலகுக்கு நிரூபிக்க
வேண்டும் என “ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம்” நூல்
வெளியீட்டு விழாவில்
கலந்துகொண்டு உரையாற்றுகையில் நடிகர்
ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ் கட்சியின்
திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதியுள்ள
“ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில்
நிஜம்” நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை 6
மணியளவில் சென்னை தியாகராய நகர்,
சர்.பி.டி தியாகராயர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரபல நடிகர் ராஜ்கிரண்
முன்னிலை வகித்தார். இந்நூலின் பதிப்பாளர்
பேட்ரிசியா, பதிப்பகத்தின் உரிமையாளர்
ஆபிரகாம் செல்வக்குமார்
வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் புலவர் புலமைப்பித்தன்
தலைமையுரையாற்ற, பழ.நெடுமாறன் அவர்கள்
நூலினை வெளியிட்டு, உரையாற்ற
தியாகி கோவிந்தராசு,
ஈழத்துக்காந்தி டேவிட் அய்யா ஆகியோர்
நூலினை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இயக்குநர் புகழேந்தி, ஓவியர்
புகழேந்தி, வழக்கறிஞர் புகழேந்தி, நடிகர்
இராஜ்கிரண், தோழர் டி.எசு.எசு.மணி, நாம்
தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் ஆகியோர் உரையாற்றினர். நடிகர் ராஜ்கிரண்
உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments