வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனி ஈழத்தை அமைப்பதற்கே சர்வதேசம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற ஒரு பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே அந்த பொறியில் அரசு சிக்கக்கூடாது.
13வது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும். அது பின்னர், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் அதனை ரத்துச் செய்யுமாறு நாம் கோருகின்றோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதன் அதிகாரங்கள் தீயசக்திகளிடம் செல்லும் அந்த சக்திகளைப் பயன்படுத்தி புலி ஆதரவாளர்களுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பர்.
எனவே, வடக்கு மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் அரசு நடத்தக்கூடாது, வடக்குத் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்க கூடாது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தை தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும். எனவே, அரசு இந்த விடயத்தில் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
தேசத்துரோகமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பந்தனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சட்டமா அதிபருக்கும், சபாநாயகருக்கும் நான் கடிதம் அனுப்பவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனி ஈழத்தை அமைப்பதற்கே சர்வதேசம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற ஒரு பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே அந்த பொறியில் அரசு சிக்கக்கூடாது.
13வது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும். அது பின்னர், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் அதனை ரத்துச் செய்யுமாறு நாம் கோருகின்றோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதன் அதிகாரங்கள் தீயசக்திகளிடம் செல்லும் அந்த சக்திகளைப் பயன்படுத்தி புலி ஆதரவாளர்களுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பர்.
எனவே, வடக்கு மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் அரசு நடத்தக்கூடாது, வடக்குத் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்க கூடாது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தை தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும். எனவே, அரசு இந்த விடயத்தில் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
தேசத்துரோகமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பந்தனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சட்டமா அதிபருக்கும், சபாநாயகருக்கும் நான் கடிதம் அனுப்பவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment