Latest News

April 09, 2012

யாழில் குடும்ப வறுமையால் மூன்று பிள்ளைகளின் இளம்தாய் நஞ்சருந்தி தற்கொலை
by admin - 0

யாழ்.தீவகப் பகுதியான வேலணை புளியங்கூடல் பகுதியில் குடும்ப வறுமை காரணமாக மூன்று பிள்ளைகளின் இளம்தாய் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்
யாழ்.வேலணை புளியம் கூடல் பகுதியைச் சேந்த கிருஸ்ணராசா காஞ்சனா (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக யாழ்.ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர்
ஏழ்மைநிலை காரணமாக மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட இவர் புகையிலைக்கு பாவிக்கும் கருமிநாசினி மருத்தை குடித்து மரணமாகியுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்
நஞ்சருந்தி உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊர்கவற்துறை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்...
இப்படி இருக்கும் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவ தமிழ்சமுகம் முன்வரவேண்டும்
« PREV
NEXT »

No comments