Latest News

January 10, 2012

பன்றிச் சம்பாவின் பெருக்கத்தால் அம்பாறை விவசாயிகள் பாதிப்பு
by admin - 2

அம்பாறை மாவட்டத்தில் நெற்பயிர்களிடையே பன்றிச் சம்பா எனப்படும் கலப்பின நெற்பயிரின் பெருக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபடும் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

பன்றிச்சம்பா எனப்படும் இந்த நெல்லினம் நெற்பயிர்களுக்கு இடையே அதிகமாகப் பெருகி வருவதனால் நெற்பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே வயல்களில் பெருகியுள்ள பன்றி சம்பா எனப்படும் கலப்பின நெற்பயிரின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கலப்பின நெற்பயிரினை அகற்றிவருகின்ற போதிலும் அவற்றின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
« PREV
NEXT »

2 comments

வேகநரி said...

சகோதரனே பன்றிச்சம்பாவினால் தான் பிரச்சனை ஆனால் சாப்பிடும் போது பன்றி கறி தான் எப்போதும் சிறந்தது

admin said...

உண்மைதான் உங்கள் வரவுக்கு நன்றி