இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை ஏழு பேர் மரணமாகியுள்ளனர். இப்புதுவித காய்ச்சல் நோய்க்காளாகிய பலர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் அரச ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இறுதியாக உதயநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சத்தியசீலன் (வயது45) என்பவர் இக்காய்ச்சல் காரணமாக மரணமானார்.
இதேவேளை, வேகமாக பரவிவரும் காச்சல் நோயினை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் இருந்து வைத்ச்திய நிபுணர்குழு வன்னிக்கு விரைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
No comments
Post a Comment