Latest News

December 11, 2011

மகள் ஸ்ருதியை அழ வைத்த கமல்
by admin - 0

உலக நாயகன் தனது மூத்த மகள் ஸ்ருதியை கண்ணீர் சிந்த வைத்துள்ளார். என்னடா கமல்ஹாசன் எதற்காக தனது செல்ல மகளை அழ வைத்தார் என்று தானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கு.

ஸ்ருதி இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ருதிக்கு தற்போது கூடுதல் இல்லை பன்மடங்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறிடி.

உலகமெல்லாம் முணுமுணுக்கும் பாடல் கொலவெறிடி. இந்த பாடல் மூலம் தனுஷும், ஸ்ருதியும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

சரி ஸ்ருதியை கமல் எதற்காக அழ வைத்தார் என்ற மேட்டருக்கு வருவோம்.

கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா ஆகிய படங்களை ஸ்ருதி 20 தடவைக்கும் மேல் பார்ததுள்ளாராம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் தனது தந்தையின் சோகமான நடிப்பைப் பார்த்து அழ ஆரம்பித்துவிடுவாராம்.

அடடா என் அப்பா எவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது சோகமான நடிப்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறதே என்று ஸ்ருதி தன் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறார்.

« PREV
NEXT »

No comments