Latest News

December 26, 2011

கறுப்புக் கொடி காட்ட புறப்படும்போதே விஜயகாந்த் கைது!
by admin - 0

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் காட்ட வீட்டிலிருந்து புறப்பட்ட போதே தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.



முல்லைப் பெரியாறு, கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப் பிடிப்பதால், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இன்று காலை முதலே அவரது வீட்டைச் சுற்றி ஏராளமான தேமுதிக தொண்டர்கள் குவிந்திருந்தனர். பெரும்பாலானோர் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.

திட்டமிட்டபடி இன்று காலை கருப்புக்கொடி காட்ட தன் வீட்டிலிருந்து புறப்பட்ட விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். அவரை மாநகர பஸ்ஸிலேற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருடன் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் கைதாகினர். விஜயகாந்த் கைது செய்யப்பட்ட போத, தொண்டர்கள் பிரதமரையும் மத்திய அரசையும் எதிர்த்துக் கோஷமிட்டனர்.
« PREV
NEXT »

No comments