Latest News

November 28, 2011

யாழ். பல்கலைக்கழக மாணவர் மாயம் - கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
by admin - 0

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீட மாணவர் ஒருவர் நேற்று இரவுமுதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

27 வயதுடைய வேதாரணியம் லதீஸ் என்பரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

நேற்றிவு திருநெல்வெலியிருந்து கைதடியில் உள்ள விடுதிக்கு சென்றவர் விடுதியை சென்றடையவில்லை எனவும் இவரை இடையில் யாரும் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இறுதிக் கட்ட யுத்தத்தின் படையினரால் கைது செய்யப்பட்ட லதீஸ் பூஸா தடுப்பு முகாமில் இருந்து விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக யாழ். குடாநாட்டில் படையினரின் செயற்பாடுகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் அதிருப்பி வெளியிட்டுள்ளனர். 
« PREV
NEXT »

No comments