Latest News

November 28, 2011

இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு
by admin - 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் இயற்கை அனர்த்தங்களால் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் சீரற்ற காலநிலையால் 16945 குடும்பங்களைச் சேர்ந்த 66760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அமைக்கப்பட்டுள்ள 6 தற்காலிக முகாம்களில் 424 குடும்பங்களைச் சேர்ந்த 1705 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
« PREV
NEXT »

No comments