Latest News

November 21, 2011

விதைக்காத வயல் நிலத்தில் முளைவிட்ட நெற் பயிர்கள்
by admin - 0

தென்மராட்சி தெற்கு மற வன்புலோ பகுதியில் நெற் செய்கை மேற்கொள்ளப்படாத வயல்களில் திடீரென நெற் பயிர்கள் காணப்பட்டதால் நெற் செய்கையாளர்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.அந்தப் பகுதி குளமொன் றுக்கு அருகில் ஆலயத்துக்குச் சொந்தமான 100 பரப்பு நெல் வயல்கள் இவ்வருடம் எவரும் குத்தகைக்கு எடுக்கப்படாத தால் அவ்வயல்களில் விதைப்பு மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வயல்களில் வெள் ளம் காணப்பட்டது. திடீரென இந்த வயல்களில் நெற்பயிர் கள் காணப்படுகின்றன. இதனை அதிசயமாகப் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள விதைக்கப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் இரவோடிரவாக பிடுங்கப்பட்டுள்ளதாக நெற்செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வயல்களில் திருடப் பட்ட நெற்பயிர்கள் அந்த வயல்களில் இரவிரவாக நடப்பட்டிருக்கலாமென மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.தென்மராட்சி தெற்குப் பகுதியில் பயிரிடப்பட்ட நெற் பயிர்களை தனங்கிளப்பில் கட்டாக்காலி மாடுகள் அழிப் பதும் மறவன்புலோப் பகுதி யில் திருடர்கள் அபகரிப்பதாக வும் தெரிவிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments