Latest News

July 24, 2011

சிவப்பு சிமெந்து கலந்த அரிசி \"தவிட்டரிசி\" என விற்பனைக்கு!
by admin - 0


தவிட்டரிசி எனக் கூறப்படும் சிவப்பு சிமெந்து கலந்த அரிசி நாடு முழுவதும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து நுகர்வோர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்களின் இந்த வலையில் சிக்கவேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, ஏறாவூரிலுள்ள அரிசி ஆலையொன்றில் தவிட்டரிசி என்ற பெய ரில் சிவப்புச் சிமெந்து கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒன்பது மூடை அரிசி கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த அரிசி ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப் பட்டார் என ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம். எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையங்களிலும், உணவு உற்பத்தித் தொழிலகங்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பாவனைக்குதவாத உணவு பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  uthyaan
« PREV
NEXT »

No comments