யாழ்.மாணவி புதிய சாதனை |
இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் நடத்தப்படும் கனிஷ்ட பிரிவுக்கான தடகளப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி கே.தனுஷா தேசிய ரீதியில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் 20 வயதுக்குட்பட்டோருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3 மீற்றர் உயரத்தைத் தாண்டியதன் மூலம் தேசிய ரீதியில் இந்தச் சாதனையை ஏற்படுத்தி முதலிடம் பெற்றார்.இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை வீராங்கனை ஒருவர் இந்தப் போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாண்டியதே தேசிய ரீதியில் சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சே.தனுஷா நேற்று முறியடித்துச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். கனிஷ்ட பிரிவுக்கான இந்தத் தடகளப் போட்டிகள் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்று இடம்பெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் கே.தனுஷா 3 மீற்றர் தாண்டி முதலிடத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் மற்றொரு மாணவியான எஸ்.ஜக்சனா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரர்களான வி.லவணன் 3.40 மீற்றர் உயரம் தாண்டி இரண்டாம் இடத்தையும், கே.றொசான் 3.30 மீற்றர் உயரம் தாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இந்தப் போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 43 வீர, வீராங்கனைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 10 வீர, வீராங்கனைகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. |
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
June 18, 2011
யாழ்.மாணவி புதிய சாதனை
by
admin
04:51:00
-
0
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment