Latest News

May 26, 2011

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார் ரஜினி!
by admin - 0

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, நேற்று மாலை நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னதாக நேற்று காலை 7 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள ரஜினி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாட்டையும், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்தில் தியானத்தையும் முடித்தக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பினார்.

மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதுகுறித்து, ரஜினியின் இல்லத்தில் விசாரித்தபோது, "ரஜினி சார் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்", என்றனர்.

ஓய்வுக்காக அவர் அமெரிக்கா செல்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அடுத்த மாதம்தான் படப்பிடிப்பில் பங்கேற்பார்...









தற்போது பூரண நலத்துடன் இருந்தாலும், படப்பிடிப்பு தளத்துக்குள் நோய்த் தொற்று எதுவும் அவருக்கு ஏற்படக் கூடாது என்பதால், ஒரு மாதம் வரை ஓய்விலிருப்பார் என்றும், அதன் பிறகே ராணாவில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அதுவரை ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.
« PREV
NEXT »

No comments