Latest News

January 18, 2011

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
by admin - 0

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது. இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசை காட்டி, ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத் தூண்டுகின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது இவர்களுக்கு எளிதாகிறது. பிரவுசர்கள் கம்ப்யூட்டர் தரும் மெமரியினைத் தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின் புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது. பின்னர் அவற்றின் மூலம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.
« PREV
NEXT »

No comments