Latest News

April 10, 2017

மைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்!
by admin - 0

தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

இன்று ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினால், போரினால் பாதிக்கப்பட்ட வீடற்ற மக்களுக்கு 150 வீடுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா சின்னடம்பன் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – ரணில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பான சில கருமங்களை ஆற்றியிருந்தாலும், அதில் முழுமையாக திருப்திகொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமது காணிகளை மீட்பதற்காகவும், தமது பிள்ளைகளைத் தேடியும், பட்டதாரிகளாக வேலைகளுக்காகவும் நாளாந்தம் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் இம்மக்களின் போராட்டத்தில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.

இவ்வாறான நிலைமை நீடித்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் தயவு தாட்சணையின்றி இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.



« PREV
NEXT »

No comments