Latest News

April 01, 2017

மாவையை கண்­ட­வுடன் கத­றி­ய­ழுத காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள்
by admin - 0

காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் ஒன்­றி­ணைந்து முல்­லைத்­தீவு மாவட்ட செய­லகம் முன்­பாக முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்டம் தீர்­வின்றி தொடர்­கின்­றது. முல்­லைத்­தீவு மாவட்ட செய­லகம் முன்­பாக கடந்த 8ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த போராட்டம் எந்­த­வித சாத­க­மான பதில்­களும் அற்­ற­நி­லையில் தொடர்ந்து செல்­கின்­றது. 

இந்த நிலையில் தொடர்ந்து போரா­டி­வரும் காணாமல் ஆக்­கப்­ப­ட­டோரின் உற­வி­னர்­களை முல்­லைத்­தீ­வுக்கு நேற்று விஜயம் செய்த யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா நேரில் பார்­வை­யிட்­ட­துடன் காணாமல் ஆக்­கப்­ப­ட­டோரின் உற­வு­களின் கருத்­துக்­க­ளையும் கேட­ட­றிந்து கொண்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் தமது பிள்­ளை­களை பற்­றிய நல்ல முடிவை பெற்­றுத்­தா­ருங்கள் என கத­றிய உற­வுகள் உங்­க­ளி­டம்தான் நாம் உரி­மை­யுடன் இதனை கேட்­கலாம் எனவும் தெரி­வித்­தனர்.

இத­னைத்­தொ­டர்ந்து போரா­டி­வரும் மக்கள் மத்­தியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை உரை­யாற்­று­கையில்  போர் காலத்­திலும் அதற்க்கு பின்­ன­ரான காலத்­திலும் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்கள் பற்­றியும் இரா­ணு­வத்­திடம் பெற்­றோரால் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பிள்­ளை­களின் நிலை­மைகள் பற்­றியும் இந்த அர­சாங்கம் ஒரு முடிவு சொல்ல வேண்டும். இந்த தாய்­மாரின் கண்­ணீ­ருக்கு ஒரு ஆறுதல் வழங்­க­வேண்டும்.இந்த சம்­ப­வங்கள் கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் நடை­பெற்­றி­ருந்­தாலும் இந்த அர­சாங்கம் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு இதற்கு ஒரு நல்ல முடிவை சொல்­ல­வேண்டும். 

இதற்­காக நாம் தற்­போ­துள்ள அர­சாங்­கத்­தி­டமும் சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் எங்களால் முடிந்த அளவுக்கு அவர்களை வற்புறுத்தி ஒருபதில் கிடைக்கக்கூடியதாகவும் இந்த தாய்மாரின் கண்ணீருக்கு ஆறுதல் தரக்கூடிய நடவடிக்கையையும் நாம் நிச்சயமாக எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments