Latest News

April 06, 2017

தமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்
by admin - 0

 

சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியும் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

வடக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபை யின்  குழு­வினர் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை அவ­ரது வாசஸ்தலத்தில் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். குறித்த சந்­திப்பு தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு  கருத்துத் தெரி­விக்­கையிலேயே இதனைத் தெரி­வித்தார்.  

மேலும் அவர் தெரி­விக்­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு இலங்கை அர­சாங்கம் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளது. அதனை இலங்கை அர­சாங்கம் செய்ய வேண்டும் கால நீடிப்பு வழங்­கப்­பட்டு விட்­டது.

நாங்கள் அர­சாங்­கத்­திடம் எமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றியும் அதற்­காக நிவா­ர­ணங்கள் கிடைக்­க­வில்லை. 

ஆகவே எமது மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு சர்­வ­தேச நாடு­களும் நிறு­வ­னங்­களும் நெருக்­கு­தல்­களை வழங்­க­வேண்டும் என கேட்­டுக்­கொண்டேன். 

சர்­வ­தேச மன்­னிப்புச் சபை குழுவினர் எமது பகு­திக்கு வந்து தற்­போது நடை­பெற்று வரும் மக்­களின் போராட்­டங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்டு வந்­துள்­ளார்கள். 

குறிப்­பாக காணிகள் விடு­விப்­புக்காகப் போராடி வரும் மக்­க­ளையும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்­களின் போராட்­டங்­களை யும் பார்­வை­யிட்­டது மட்­டு­மன்றி பாதிக்­கப்­பட்ட மக்­களின் வீடு­க­ளுக்குச் சென்று அவர்­க­ளது நில­மை­க­ளையும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளது அனைத்து விட­யங்­க­ளையும் சேக­ரித்து வைத்­துள்­ளார்கள். அதேபோல் காணி விடு­விப்­புக்­காக போராடி வரும் மக்கள் தற்­போ­தைய குடி­யி­ருப்­பு­க­ளையும் பார்­வை­யிட்டு அவர்­களின் விப­ரங்­க­ளையும் அவர்கள் பெற்­றுள்­ளார்கள். 

இவர்கள் சர்­வ­தேச ரீதி­யாக செயல்­ப­டு­ப­வர்கள் என்­பதால் எமது மக்­களின் பிரச்­சி­னையை தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யுள்ளோம்.

இதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்க வேண்டும் குறிப்­பாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள், நாடுகள் அர­சாங்­கத்தின் மீது நெருக்­கு­தல்­க­ளையும் சாத­க­மான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிப்­பதன் மூலம் தான் எமது மக்­க­ளுக்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நன்­மைகள் பலன்கள் கிடைக்கும். இதனை நீங்கள் செய்ய வேண்டும் இதன் மூலம் தான் எமது மக்­க­ளுக்கு உரி­மைகள் கிடைக்கும். தீர்­வுகள் கிடைக்கும். ஆகவே இதற்கு நெருக்­கு­தல்­களை வழங்க வேண்டும் என்றார். 

இதே­வேளை சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பொது செய­லாளர் சாயின் செட்டி தெரி­விக்­கையில்,

நாங்கள் மக்­களின் போராட்­டங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்டோம் இவை தொடர்பில் இலங்கை அர­சிடம் தெரி­விப்போம். 

மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் .கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அமுல் படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புக்களையும் அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை ஐ.நாவிலும் இது தொடர்பில் எடுத்துக்கூறுவோம் எனத் தெரிவித்தார்.  

« PREV
NEXT »

No comments