Latest News

December 19, 2016

பிரித்தானியாவில் இடம்பெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!
by admin - 0

பிரித்தானியாவில் இடம்பெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!
 

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட்ட இம்மாத (மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட அன்னிய சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.
 
தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று (18-12-2016) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.

திரு. வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி (தமிழ் கல்விக்கூடம்) 
திருமதி. சசிகலா நிரூபன் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.
 
அடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தொழில்கட்சி உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திரு. ஜீவா அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழ மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. சதா அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. கிளி அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாவீரர் மலரவனின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் அணிவித்தார்.
 
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, மலர்மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான திரு. மயில்வாகனம் அவர்கள் அணிவித்தார்.
 
மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. பவா அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன் திரு. டேவிட் பரராஜசிங்கம் அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
 
அரங்க நிகழ்வுகளாக, மாவீரர் வணக்க நடனத்தை 
1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் மேஜர் இசைக்கோன் அவர்களின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெப்.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன் வழங்க, கவிதைகளை செல்வி. பிரவீனா விஜயகுமார், திருமதி. ஜெசிந்தா சுரேஸ், திரு. ஜெகதீஸ்வரன் நவரட்ணம் ஆகியோற் வழங்கினர்.
 
தலைமை உரையினை திரு. வேணுகோபால் ஆசிரியர் வழங்க, திருமதி. சாந்தி சத்தியேந்திரன், திரு. இன்பன் மாஸ்ரர், திரு. அகிலன் (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான இளையோர் விவகார அமைச்சர்) ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.
 
எழுச்சி கானங்களை திரு. மைக்கல், திரு. சுரேஸ் ஆகியோர் வழங்க இன்றைய நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலகந்துகொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை மகிழ்வையும், நம்பிக்கையை ஏற்படுத்தியோடு தமிழீழ விடுதலை நோகிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
 


மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.


-ஈழம் ரஞ்சன்- 

« PREV
NEXT »

No comments