Latest News

December 19, 2016

ஜெயலலிதாவுக்கு வைத்தியம் செய்த வைத்தியர் யார் ? உண்மை தகவல்கள்
by admin - 0

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த இலண்டர் டாக்டர் ரிச்சர்டு பேலே குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. 
 
இவர் நுரையீரல் தொற்றுக் கிருமி ஸ்பெஷலீஸ்ட்  டாக்டர் இல்லை. மாட்டு இறைச்சியை பதப்படுத்தும் நிபுணர். ஒரு வருடம் வரையில் இறைச்சியை கெடாமல் பதப்படுத்தும் தொழிற்சாலை நடத்துகிறார் [உடல் பதப்படுத்தும் நிபுணர்].

டாக்டர் ரிச்சர்டு பேலே என்னும் அடையாளத்துடன் இந்தியாவிற்குள் இவரை வரவழித்தது யார்? தமிழக அரசு / இந்திய அரசு அனுமதி இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்க முடியாது. 

ஜெயலலிதா செப்டம்பர் / அக்டோபர் / நவம்பர் வரை உயிருடன் இருந்தாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கவே இலண்டன் டாக்டர் என்று அப்போலோ கூறியது. ஆனால் இத்தனை மாதங்களும் ஜெயலலிதாவின் பிணத்தை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவே இலண்டன் நபரை அழைத்துள்ளனர்.
 உண்மை என்ன?


இப்படியான பொய் செய்திகளை சில ஊடகங்கள் பரப்பி வருகின்றன அம்மையார் ஜெயலலிதா இறப்பு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் பரளிகளையும் பரப்பி வருகின்றன.

இப்படியான தகவல்கள் தமிழக மக்களை குழப்புவதற்காக உருவாக்குபவையாகவும் தங்களது இணையத்திற்கு பார்வையாளர்களை அதிகரிப்பதற்கும் செய்யப்படும் செய்திகாளகவே அமைகின்றன அதன் ஒரு வடிவமே லண்டன் வைத்தியர் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவலாளாகும்.

உண்மையில் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டால் கூட இப்படியான வதந்திகள் மறைந்த முதல்வருக்கு நீதியை பெற்றுத்தருவதை தடுக்கவும் மக்களுக்கு முதல்வருக்கு என்ன நடந்தது என்ற  உண்மையை மறைக்கவும் வழி ஏற்கடுத்திக்கொடுக்கும் 

லண்டன் வைத்தியர் பற்றிய தகவல்கள் இதோ 
 சரவணை மைந்தன் 


« PREV
NEXT »

No comments