Latest News

October 31, 2016

மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணம் தொடரில் சாவகச்சேரி நீயூ பவர் அணியை வீழ்த்தி அளவெட்டி மத்தி அணி சம்பியன்
by admin - 0

மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணம் தொடரில் சாவகச்சேரி நீயூ பவர் அணியை வீழ்த்தி அளவெட்டி மத்தி அணி சம்பியன்

 

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்திவந்த யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான அணிக்கு 15 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை இரவு 7:00 மணியளவில் கழக மைதானத்தில், கழகத்தலைவர் த. வேணுகானன் தலைமையில் நடைபெற்றது. 

 

முதலில் துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி அணி 12ஒவர்களில் சகல விக்கெட்களை இழந்து 29 ஒட்டங்களை பெற்றது. இதில் றெனோ 11 கீதன் 6 றொக்ஷன் 4 ஒட்டங்களை பெற்றனார். 

அளவெட்டி மத்தி அணியின் பந்துவீச்சு சார்பில் நிஷா 6சுதன், கபிலன் தலா 1விக்கெட்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அளவெட்டி மத்தி அணி 7-2 ஒவர்களில் வெற்றிபெற்றது. இதில் சியந்தன் 7 அஜித் 6 ஒட்டங்களை பெற்றனார். 

சாவகச்சேரி நீயூபவர் அணியின் பந்துவீச்சின் சார்பில் அருண் 2 கீதன் 1 விக்கட்களை வீழ்தினார். 

 

இறுதியில் 7 விக்கெட்களினால் அளவெட்டி மத்தி அணி வெற்றிபெற்று மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணத்தை கைப்பெற்றியது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வலிவடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. சோ. சுகிர்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

கௌரவ விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. செ. சுபச்செல்வன் யா/நெல்லியடி மத்திய கல்லுரி அதிபர் திரு. க. கிருஷ்ணாகுமார் வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக் தலைவர் திரு. ரி. வரதராசன், அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் திரு. ச. செல்வானந்தன் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஒய்வுநிலை ஆசிரியர் திரு ச. கைலாசபதி, ஆசிரியர் திரு. து. விஜயகுமார் கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு. வி. ஹரிகரன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனார்.



« PREV
NEXT »

No comments