Latest News

September 02, 2016

உலகின் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் - இராணுவம் ஏற்றுக்கொண்டது
by admin - 0

பாகிஸ்தான் ராணுவம், 300-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் சூத்திரதாரி மற்றும் உயர்மட்டத் தளபதியையும் கைது செய்துள்ளதாக செய்தி தொடர்பாளர் ( லெப்டினன்ட் ஜெனரல் அசிம் பஜ்வா ) கூறினார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட ஐ.எஸ் அமைப்பின் முயற்சிகளை ராணுவம் முறியடித்ததாகத் தெரிவித்தார்.

கடந்த மாதம், குவெட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் . இருந்தது என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

« PREV
NEXT »

No comments