Latest News

August 25, 2016

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
by admin - 0

பிரித்தானியாவில் கானாமல் போனோர் தினத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 28.08.2016

☆ 2009 ம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 105 போராளிகளது சந்தேகத்திற்கு இடமான  மரணங்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் சர்வதேச விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும்

☆ எழு ஆண்டுகள் கடந்தும் காணாமல் போனோர் பற்றிய ஆரோக்கியமான நம்பகத்தன்மையுடைய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் 

☆ கைதுகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் இவை அனைத்தும் உடனே நிறுத்தப்பட வேண்டும் 

ஆகிய அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் போனோர் நாளில் உலகிற்கு உரத்துக்கூறும் அதே நேரம் பிரித்தானியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காலம் :
28.08.2016 ஞாயிற்றுக்கிழமை 

நேரம்  :
மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை

இடம் :
10 Downing Street,
London 
SW1A 2AA

அனைவரும் இதில் கலந்து கொண்டு  தாயக உறவுகளின் கரங்களை வலுச்சேர்ப்போம் 

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 

TGTE UK 

மேலதிக தொடர்பிற்கு 
குமார் 

சேகர்
« PREV
NEXT »

No comments