Latest News

June 07, 2016

ஏழு நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி வாகனப் பேரணி
by admin - 0

ராஜீவ் கொலை என்ற பெயரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நிரபராதித் தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி வேலூர் முதல் சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ளது. 

வருகிற ஜூன் 11ஆம் தேதி காலை 8 மணியளவில் இந்த பேரணி வேலூரில் இருந்து துவங்குகிறது. 

நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி நடைபெறும் இந்த பேரணியில் தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
« PREV
NEXT »

No comments