Latest News

May 08, 2016

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்
by admin - 0

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்

நல்லாட்சி நல்லாட்சி என சொல்லி சொல்லி இனவழிப்பு திட்டமிட்டு நடக்கிறது, மகிந்தவை போல மைத்திரி ஆட்சியிலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்து, தனது உறவினர்கள் பலரை இழந்து வாழும் நான்கு பிள்ளைகளின் தாயான ஜெ.ஜெகயோதிஸ்வரிக்கு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியான அச்சுறுத்தி வருவதாக குறித்த பெண் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டை வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு, மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பாக சாட்சியங்களை கடந்த மார்ச் மாதம் திங்கள்கிழமை (28) பதிவுசெய்தபோது ஆணைக்குழு முன் தனது உறவினர்கள் படையினரினால் கொல்லப்பட்ட மற்றும் கடத்தி செல்லப்பட்ட தனது உறவினர் இது வரை விடுவிக்கப்படாமை தொடர்பாக கண்ணீர் மல்க சாட்சியம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த குடும்ப பெண்ணாகிய ஜெ.ஜெகயோதிஸ்வரி சாட்சியமாக தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ச்சியாக மன்னாரில் புலனாய்வு பிரிவினரால் குறித்த குடும்ப பெண் அச்சுறுத்தப்பட்டு வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.

இதேவேளை ஜெகயோதிஸ்வரி காணாமல்போனோர் தொடர்பாக துணைநிற்பவர் தொடர்பான பதவியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதினால் ஏற்கனவே புலனாய்வு பிரிவினரால் பலமுறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன் மனித உரிமை தொடர்பான அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி காணமால்போனோர் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வங்காலையில் நடைபெறவிருந்த ஒன்று கூடலுக்கான ஏற்பாட்டினை செய்வதற்கு கடந்த 4ஆம் திகதி வங்காலை கிராமத்திற்கு அயல் கிராமமாகிய நறுவிலிகுளம் சென்றிருந்தார்.

அப்போது இரவு 7:30 மணியளவில் கடற்படை புலனாய்வு துறையினர் மூவர் தான் இல்லாதபோது தனது வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த பிள்ளைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தவாறு யார் என கேட்டபோது பதில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இந்த நிலையில் பிள்ளைகள் அயல் வீட்டாரை அழைத்துள்ளனர். இதனையடுத்து அயல் வீட்டு பெண் ஒருவர் வந்து பார்த்தபோது குறித்த மூன்று பேரையும் அவதானித்துள்ளார்.

இதன் பின் அந்தப் பெண்ணிடம் தம்மை புலனாய்வு பிரிவினர் என்று தெரிவித்ததுடன் தம் ஜெகயோதிஸ்வரியை தேடிவந்ததாகவும் காணாமல்போனோர் தொடர்பாக கூட்டம் நடைபெறவுள்ளதால் விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வீட்டில் இருந்த குழந்தைகளையும் அச்சுறுத்தி சென்றுள்ளதுடன் குறித்த கடற்படை புலனாய்வு பிரிவினர் தொலைபேசி இலக்கத்தினையும் பிள்ளைகளிடம் வழங்கி குறித்த பெண்ணை புலனாய்வு பிரிவிருடன் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பின் ஜெகயோதிஸ்வரி குறித்த தினம் இரவு 8:30 மணியளவில் வங்காலையிலுள்ள தனது விடுக்கு வந்தபோது தனது பிள்ளைகள் அச்சத்தில் அழுது கொண்டு குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்ததாகவும், மேலும் கிராமத்தில் பலரிடமும் தன்னை பற்றி புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருவதாகவும் இதனால் தானும் குடும்பமும் மிகவும் அச்சத்திலிருப்பதாக முறைபாட்டில் தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »

No comments