Latest News

April 01, 2016

விடுதலை புலிகள் மீண்டும் தலை­தூக்கும் அபாயம்
by admin - 0

நல்­லாட்சி அர­சா­னது நாட்டின் தேசிய பாது­காப்­புடன் தொடர்ச்­சி­யாக விளை­யா­டு­வ­தோடு மீண்டும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பி­னரின் தற்­கொலை குண்டு தாக்­குதல் உட்­பட அனைத்­து­வி­த­மான பயங்­க­ர­வாத செயற்பா­டு­க­ளுக்கும் வழி­ய­மைத்து கொடுக்­கின்­றது என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் விர­வன்ச குற்றம் சுமத்­தினார்.

நாட்டின் தேசிய பாது­காப்பை இல்­லா­தொ­ழித்து எமது பொரு­ளா­தா­ரத்தை நாளுக்கு நாள் சீர­ழிக்கும் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு முடி­வு­கட்ட அனை­வரும் ஒர­ணி­யாக அணி­தி­ரள வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே விமல் விர­வன்ஸ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் விர­வன்ஸ செய்­தி­யாளர் மாநாட்டில் மேலும் குறிப்­பி­டு­கையில் முன்­னைய அரசின் கீழ் எமது நாட்டின் தேசிய பாது­காப்­பா­னது மிகவும் சக்­தி­மிக்­க­தாக காணப்­பட்­டது. இன்று நல்­லாட்சி என ஆட்­சி­பீ­டத்தில் இருக்கும் இந்த அர­சாங்­க­மா­னது நாட்டின் தேசிய பர்­து­காப்­புடன் தொடர்ச்­சி­யாக விளை­யா­டி­வ­ரு­கின்­றது.

நேற்று முன்­தினம் யாழ்­பாணம் மற­வன்­பு­லவு பகு­தியில் தற்­கொலை அங்கி, கிளைமோர் உள்­ளிட்ட அபா­ய­க­ர­மான வெடி­பொ­ருட்கள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸா­ரினால் அவை மீட்­கப்­பட்­டுள்­ளன. மறு­புரம் பொலி­ஸா­ரினால் கடந்த காலங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அனைத்து யுத்த ஆயு­தங்­களும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பினால் முன்னர் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. நேற்று பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்ட ஆயி­தப்­பொ­ருட்கள் அனைத்­துமே தற்­போது, புதுப்­பிக்­கப்­பட்­ட­வை­யாக காணப்­ப­டு­கின்­றன.
அத்­துடன், கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களை பொதி செய்ய கடந்­த­வார சிங்­கள பத்­தி­ரிகை ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு சிம் அட்­டைகள் ஐந்தும் அதில் உள்­ள­டங்­கி­யுள்­ளன, அந்த பொதியில் வெள்­ள­வத்தை என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­துள்­ளது. இவ்­வா­றான நிலையில் அர­சாங்­க­மா­னது பொய் கதை­களை கூறி மக்­க­ளையும் எமது நாட்­டையும் ஏமாற்ற முயல்­வ­தோடு உண்­மை­யான தக­வல்­க­ளையும் மூடி மறைக்க முயற்­சிக்­கின்­றது.
இவ்­வாறு மீட்­கப்­பட்ட அனைத்து ஆயுத பொருட்­க­ளுமே கொழும்­பிலோ அல்­லது வேறு எதேனும் பிர­தேங்­க­ளிலோ முன்­னெ­டுக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த நாசக்­கார செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்த வைக்­கப்­பட்­டி­ருந்­தவை என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நாட்டில் நடை­பெறும் சம்­ப­வங்கள் மூலம் எமது நாட்டின் தேசிய பாது­காப்பு எவ்­வா­றான நிலையில் காணப்­ப­டு­கின்­றது என்­ப­தனை மக்கள் புரிந்து கொள்­வார்கள்.
வடக்கு கிழக்கு உட்­பட அனைத்து பகு­தி­க­ளிலும் இன்று இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­க­மா­னது முற்­றாக கட்­டு­ப­டுத்­தி­யுள்­ள­தோடு சிங்­கள, தமிழ் புது­வ­ரு­டத்தை கொண்­டாட முடி­யாத வகையில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான இரா­ணு­வத்­தி­னரை பொய் குற்­ற­சாட்­டுக்கள் மூலம் சிறையில் அடைத்­துள்­ளது.
ஆனால் உலக அளவில் மிகவும் கொடிய பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த விடு­தலை புலி­களின் செயற்­பா­டு­களை மீண்டும் எமது நாட்டில் தொடர்­வ­தற்­கான வாய்ப்­பினை ஏற்­ப­டுத்தி கொடுத்து பல்­வேறு உயிர் தியா­கங்­களின் மத்­தியில் பெறப்­பட்ட நாட்டின் தேசிய பாதி­காப்பின் உறுதி தன்­மை­யினை மீண்டும் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு தாரை­வார்க்க முயற்­சிக்­கின்­றது.
நால்­லாட்­சியை முன்­னெ­டுப்­ப­தாக சிறி­சேன, விக்­ர­ம­சிங்க, தரப்­பினர் கூறு­கின்­றனர். இன்று நாட்டின் தேசிய பாது­காப்பை இல்­லா­தொ­ழித்து எமது பொரு­ளா­தா­ரத்தை நாளுக்கு நாள் சீர­ழிக்கும் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு முடி­வு­கட்ட அனை­வரும் அணி­தி­ரள வேண்டும். இந்த அர­சாங்­கத்தின் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக இட­ம­ளிப்­போ­மாயின் எமது நாடு இனி­வரும் காலங்­களில் பாரா­தூ­ர­மான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

தகவல் அறியும் சட்­ட­மூலம்

அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரையில், ஊடகங்களுக்கும் மக்களுக்கும் எவ்வித தகவலை அறிந்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக கூறுவதாயின் இந்த சட்டத்தின் மூலம் இதுவரையில் ஊடகங்கள் உட்பட சாதாரண மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

எவ்வாறான நிலையிலும் பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலத்தினை நிறைவேற்ற இடமளிக்க போவது இல்லை. அந்தவகையில் இது தொடர்பில் சட்டநடவடிக்கையினை முன்னெடுக்க சட்டதரணிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.
« PREV
NEXT »

No comments