Latest News

April 07, 2016

புலம்பெயர் தமிழர் ஆக்கிரமிக்கும் ஆபத்து - நாமல்
by admin - 0

வெளி­நா­டு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­கள் வடக்கில் வாழும் தமிழ் மக்­களின் வீடு­களை ஆக்­கி­ர­மிக்கும் ஆதிக்­கத்தை ஆட்­சி­யு­ரிமைச் சட்­ட­மூலம் ஏற்­ப­டுத்தும் என நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்த ஐ.ம.சு. ம.வின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ, வடக்கில் 65,000 வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தாக எப்­போதோ இந்­தியா உறு­தி­ய­ளித்­தது. அதனை இன்­றா­வது நிறை­வேற்ற முயற்­சிப்­பதை வர­வேற்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஆட்­சி­யு­ரிமை (விசேட ஏற்­பா­டு­களை) சட்­ட­மூலம் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

முப்­பது வருட பயங்­க­ர­வாத யுத்­தத்தால் இடம்­பெ­யர்ந்து நெருக்­க­டி­களை சந்­தித்த தமிழ் மக்கள் இன்று வடக்கில் கைவி­டப்­பட்ட வீடுகள் காணி­களில் குடும்­பங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் நீதி­ய­மைச்சர் கொண்­டு­வந்­துள்ள ஆட்­சி­யு­ரிமை சட்ட மூலத்­தினால் யுத்­தத்­திற்கு அஞ்சி வெளி­நா­டு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் செல்­வந்­தர்­க­ளான தமி­ழர்கள் மீண்டும் இங்கு வந்து இம் மக்கள் வாழும் வீடு­களின் ஆரம்­ப­கால உரி­மை­யா­ளர்கள் தாம் என்­பதை வெளிப்­ப­டுத்தி நீதி­மன்றம் சென்று யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து பல வருட காலம் வாழும் குடும்­பங்­களை வெளி­யேற்றும் நிலை உரு­வாகும்.

அம் மக்கள் மீண்டும் நடு­வீ­திக்கு தள்­ளப்­ப­டு­வார்கள் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளா­வார்கள் இது அநீ­தி­யாகும். அதே­போன்று இங்­கி­லாந்தில் 3 இலட்­சத்­திற்கும் மேல் தமிழ் புலம்­பெ­யர்ந்­த­வர்கள், செல்­வந்­தர்கள் வாழ்­கின்­றனர்.
இதே­போன்று கனடா உட்­பட பல நாடு­களில் மில்­லியன் கணக்கில் தமிழ் மக்கள் புலம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர்.

எனவே இவர்கள் இங்கு வந்து வடக்கில் ஏக்கர் கணக்கில் காணி­களை பணம் கொடுத்து கொள்­வ­னவு செய்யும் ஆக்­கி­ர­மிக்கும் நிலை உரு­வாகும்.
அத்­தோடு வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் சிங்களவர்களின் காணி களையும் மீளக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக் ஷ. எம்.பி. தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments