Latest News

April 25, 2016

முடியுமானால் சம்பந்தனை கைதுசெய்து காட்டுங்கள் புதிய பொலிஸ் மா அதிபருக்கு சவால் விடுத்தது பொது எதிரணி
by admin - 0

எதிர்க்­கட்சி தலைவர் ஆர்.சம்­பந்தன் கடந்த ஏப்ரல் மாதம் கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள இரா­ணுவ முகா­மொன்­றுக்கு அத்­து­மீறி செல்ல முற்­பட்­ட­தோடு இரா­ணுவ அதி­கா­ரி­களின் கட­மைக்கு இடை­யூறு விளைவித்துள்ளார். எனவே அவரை உடன­டி­யாக புதிய பொலிஸ் மா அதிபர் கைதுசெய்து காட்ட வேண்டும் என ஒன்­றி­ணைந்த பொது எதி­ரணி சவால் விடுத்­தது.

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஏற்­ற­வாறு நிய­மனம் பெற்­றுள்ள புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர பத­வி­யேற்பு நிகழ்வில் தனது
எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்பில் ஊட­ கங்கள் முன்­னி­லையில் தெரி­வித்த கருத்­துக்கள் உண்­மை­யாயின் இதனை செய்­து­காட்­ட­வேண்டும் என்றும் எதி­ரணி குறிப்­பிட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளினால் மாவட்ட பொலிஸ் நிலை­யத்­திற்கு முறைப்­பாடு ஒன்று முன்­வைக்­கப்­பட்டும் இது­வரை இது தொடர்­பி­லான எந்த ஒரு விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வில்லை எனவும் பொது எதி­ரணி சுட்­டி­க்காட்­டி­யது.
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­ன­ரினால்
நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பொரளை என்.எம்.பெரேரா கேந்­திர நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­மா­நாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே எதி­ர­ணியின் சார்பில் பிவி­துரு ஹெல உரு­ம­யவின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­பன்­பில மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­உ­தய கம்­பன்­பி­ல­கு­றிப்­பி­டு­கையில்
நல்­லாட்சி என கூறி நாட்­டுற்கு எமது மக்­க­ளுக்கு முற்று முழு­வ­து­மான எதிர்­ம­றை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரும் இந்த அர­சாங்­க­மா­னது இலங்­கையின் 34 ஆவது புதிய பொலிஸ்மா பூஜித ஜய­சுந்­த­ரவை தனக்கு ஏற்­ற­வாறு சட்­ட­வி­ரோத முறையில் நிய­மித்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் புதிய பொலிஸ்மா அதிபர் தனது பதவி ஏற்கும் நிகழ்வில் இதற்கு முன்னர் எமது நாட்டின் எந்­த­வொரு பொலிஸ்மா அதி­பரோ தெரி­விக்­காத சில கருத்­து­களை தெரி­வித்­த­தோடு தனது எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்­பிலும் பல்­வேறு கருத்­து­க­ளையும் வீர வச­னங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். அதா­வது எனது செயற்­பா­டுகள் சட்­ட­ரீ­தி­யாக காணப்­படும் அர­சியல் ரீதி­யான எந்­த­வொரு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் நான் அச்­சப்­பட போவ­தில்லை நாட்டின் சட்­ட­திட்­டங்­களை உரி­ய­வாறு நிறை­வேற்­றுவேன் என்று பல்­வேறு கருத்­து­களை தெரி­வித்­தி­ருந்தார். அந்­த­வ­கையில் புதிய பொலிஸ்மா அதி­ப­ருக்கு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினை சேர்ந்த பாரா­ளு­மன்ற பிரதி என்ற ரீதியில் நான் சவால் ஒன்றை விடுக்­கின்றேன்.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய ஆர்.சம்­பந்தன் தனது கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் வடக்­கி­ழக்கில் தொழிற்­படும் அரச சார்­பற்ற அமைப்­புக்கள் என்­ப­வற்றை ஒன்­றி­ணைத்து கிளி­நொச்சு மாவட்­டத்தின் பரி­வி­பச்சான் என்ற பிர­தே­சத்தில் கஜபா படை­ய­ணிக்கு சொந்­த­மான இரா­ணுவ முகா­மொன்­றுக்கு அத்­து­மீறி செல்ல முற்­பட்டார். அங்கு கட­மையில் இருந்த இரா­ணுவ அதி­கா­ரி­களின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தோடு எமது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் முக­மாக அப்­பி­ர­தே­சத்தில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ முகாம்கள் உட­ன­டி­யாக நீக்­கப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இச்­சம்­பவம் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளினால் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இது­வரை இச்­சம்­பவம் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் எவ்­வித விசா­ரணை நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­ன­ரினால் ஏதேனும் சிறு­வி­ட­யங்கள் தவ­று­த­லாக இடம் பெற்­றாலும் எம்­மீது கடு­மை­யான சட்­டங்கள் இந்த அர­சாங்­கத்­தினால் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் எதிர்­கட்சி தலைவர் உட்­பட வடக்­கி­ழக்கில் தொழிற்­படும் அமைப்­புக்கள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் எவ்வித சட்டங்களும் அவர்கள் தொடர்பில் பிரயோகிக்கப்படுவது இல்லை.

எனவே பதிய பொலிஸ்மா அதிபருக்கு நாம் சவால் ஒன்றை முன்வைக்க விரும்புகின்றோம். அதாவது நீங்கள் ஊடகங்கள் முன்னிலையில் குறிப்பிட்ட கருத்துக்கள் உண்மையாயின் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனை இவ்விடயம் தொடர்பில் விரைவாக கைது செய்து சட்டத்தை நிலைநாட்டவேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments