Latest News

April 04, 2016

சீன தயாரிப்பு நவீன கைத்துப்பாக்கிகளுடன் இருவர் கைது
by admin - 0

சீனாவில் தயா­ரிக்­கப்­பட்ட நவீ­ன­ரக ரிவோல்வர் உட்­பட 4 துப்­பாக்­கிகள் மற்றும் ரவை­க­ளுடன் இரு சந்­தேக நபர்­களை கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு 10.30 மணி­ய­ளவில் கிம்­பு­லா­பிட்­டிய பிர­தே­சத்தில் கைது செய்­துள்­ள­தாக நீர்­கொ­ழும்பு பொலிஸார் தெரி­வித்­தனர்.

கிம்­பு­லா­பிட்­டிய, லெம்­ரோக்­வத்தை, கல்­மங்­கட பிர­தே­சத்தில் வசிக்கும் 36 வய­து­டைய ஒரு­வரும், கிம்­பு­லா­பிட்­டிய விகாரை முன்­பா­க­வுள்ள வீதியில் வசிக்கும் 33 வய­து­டைய திரு­ம­ண­மான ஒரு­வ­ருமே கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­க­ளாவர்.

பாதாள உல­கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்த சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை குற்றச் செயல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தி­விட்டு, பல்­வேறு இடங்­களில் மறைத்து வைத்­துள்­ள­தாக தமக்குத் தகவல் கிடைத்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

சந்­தேக நபர்­களை நீதி­மன்றில் ஆஜர் செய்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments