Latest News

April 04, 2016

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது உகந்ததல்ல பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்கிறார் மஹிந்த
by admin - 0

வடக்கில் நடக்கும் மோச­மான சம்­ப­வங்கள் தொடர்பில் சாதா­ரண கண்­ணோட்­டத்தில் பார்க்­காது தீவி­ர­மாக ஆராய்ந்து வடக்கின் பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்டும். வடக்கில் எப்­போ­துமே பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது. அவ்­வா­றான நிலையில் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது நல்ல விடயம் இல்­லை­யென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

சிங்­கள மக்கள் மத்­தியில் முரண்­பா­டுகள் இருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் மக்கள் மத்­தியில் இந்த அர­சாங்­கம்­நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கில் வீடொன்றில் இருந்து ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் எழுந்­துள்ள நிலையில் தேசிய பாது­காப்பில் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என பாது­காப்பு தரப்பும் தெரி­வித்­துள்­ளது. இந்த நிலை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
இன்று அர­சாங்கம் இரண்டு வேறு­பட்ட கொள்­கை­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு கொள்­கை­யிலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வேறு கொள்­கை­யிலும் இருந்­து­கொண்டு நாட்டை ஆட்சி செய்­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் இரு­வரும் ஒன்­றி­ணைந்து ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்­வது கடி­ன­மா­னது. அதனால் தான் இன்று நாட்டில் பல்­வேறு குழப்­பங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இன்று இவர்கள் செய்யும் தவ­று­களில் இருந்து வெளி­வர முடி­யாது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பல தவ­று­களை செய்­துள்­ளன. ஆனால் இப்­போது வரை­யிலும் பழி என்­மீதே சுமத்­தப்­ப­டு­கின்­றது. அவர்கள் செய்யும் அனைத்து தவ­று­களில் இருந்தும் தப்­பித்­துக்­கொள்ள என்னை பலிக்­க­டா­வாக மாற்­றி­யுள்­ளனர்.

யாரும் இன்று கட்­சி­யையோ அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையோ ஆத­ரித்து நல்­லாட்சி அர­சாங்­கத்தில் கைகோர்க்­க­வில்லை. அதி­கா­ரத்­தையும் பத­வி­யையும் விரும்­பியே இவர்கள் அர­சாங்­கத்தில் கைகோர்த்­துள்­ளனர். கடந்த ஜன­வரி மாதம் 7ஆம் திகதி கட்சி தாவி­ய­வர்­களை வைத்து இன்று என்னை தாக்­கு­கின்­றனர். நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என இவர்கள் கூறு­கின்­றனர். ஆனால் கட்­சியில் இருந்து பிரிந்து சென்­றுள்ள எம்­முடன் மீண்டும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த இவர்கள் தயா­ராக இல்லை. சிங்­கள மக்கள் கஷ்­டத்தில் உள்­ளனர். ஒதுக்­கப்­ப­டு­கின்­றனர். அதை விடுத்து வடக்கில் சென்று நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.
இன்று நாட்டில் வெடி­பொ­ருட்கள் கண்­டெ­டுக்கப் படு­கின்­றன. ஆயுத பாவனை மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. புல­னாய்வு செயற்­பா­டுகள் முழு­மை­யாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நிலைமை தொடர்ந்­து­சென்றால் நாடு மிகவும் மோச­மான விளை­வு­களை சந்­திக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­படும். ஆனால் இது அர­சாங்­கத்­திற்கு விளங்­க­வில்லை. யுத்த சூழல் நில­வி­னாலும் இல்­லா­விட்­டாலும் நாட்டில் தேசிய பாது­காப்பை பல­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. எந்த அர­சாங்­க­மாக இருந்­தாலும் நாட்டின் தேசிய பாது­காப்பில் அதிக அக்­கறை காட்­ட­வேண்­டிய தேவை உள்­ளது. இந்த அர­சாங்­கமும் தேசிய பாது­காப்பு தொடர்பில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என நினை­கின்றேன். வடக்கில் நடக்கும் மோச­மான சம்­ப­வங்கள் தொடர்பில் சாதா­ரண கண்­ணோட்­டத்தில் பார்க்­காது தீவி­ர­மாக ஆராய்ந்து பாது­காப்பில் அதிக அக்­கறை காட்­ட­வேண்டும். ஆரம்­பத்தில் இருந்தே இந்த விட­யங்கள் தொடர்பில் நாம் எச்­ச­ரித்து வந்தோம். வடக்கில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்ட போதும், புல­னாய்வு பிரிவை கட்­டுப்­ப­டுத்­திய போதும் நாம் எச்­ச­ரிக்கை விடுத்தோம். வடக்கில் எப்­போ­துமே பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது என நாம் கூறினோம்.

இந்த விடயம் தொடர்பில் நான் பிர­த­ம­ருடன் அழைப்பை ஏற்­ப­டுத்தி வின­வினேன். வடக்கில் ஆயுதம் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது இதன் உண்மை தன்­மைகள் என்ன, ஆயுதம் கண்­டெ­டுக்­கப்­பட்­டமை உண்­மையா என வின­வினேன். இது தொடர்பில் ஆராய்ந்து மீண்டும் என்­னுடன் கதைப்­ப­தாக பிர­தமர் கூறினார். நாம் அதி­கா­ரத்தில் இல்­லா­விட்­டாலும் நாட்டின் பாது­காப்பு தொடர்பில் எமக்கு அக்­கறை உள்­ளது. நாட்டு மக்­களை குழப்­பாது இந்த விட­யங்­களை கையாள்­வது அவ­சியம். அதேபோல் தேசிய பாது­காப்பு தொடர்பில் மக்­க­ளுக்கு உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வது தேசிய பாது­காப்­பிற்கு எந்த பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எமது ஆட்சியில் மேற்கொண்ட அபிவிருத்திகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மக்களுக்கு எந்தவொரு அபிவிருத்தி நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நாட்டில் பிரிவினைவாதமும் சர்வதேச ஆக்கிரமிப்பும் மட்டுமே நிலவி வருகின்றன என குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments