Latest News

March 13, 2016

பல மணி நேரம் நாடு முழுவதும் மின் தடை மக்கள் பெரும் அவதி; மின்சார சபை தலைவர் ராஜினாமா
by admin - 0

நாடு­பூ­ராகவும் நேற்று பல மணி நேரம் மின் விநி­யோகம் தடைப்­பட்­டது. நேற்று பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் துண்­டிக்­கப்­பட்ட மின் விநி­யோகம் எட்டு மணி­நே­ரத்தின் பின்னர் மீண்டும் வழ­மைக்கு திரும்­பி­யது. பிய­கம உப மின்­ உற்­பத்­தி நிலை­யத்தில் ஏற்­பட்ட உயர் மின்­ அ­ழுத்­தத்தின் கார­ண­மாக ஏற்­பட்ட தொழில்­நுட்ப கோளாறின் விளை­வா­கவே இலங்கை முழு­வதும் இருளில் மூழ்­கி­ய­தாக இலங்கை மின்­சார சபை தெரி­வித்­தது. அத்­துடன் பல பகு­தி­களில் நீர் விநி­யோ­கமும் தடைப்­பட்­ட­ிருந்­தது.

எட்டு மணி­நேர மின் விநி­யோகம் தடைப்­பட்­ட­மை­யினால் நாட்டின் அனைத்து துறை­களும் ஸ்தம்­பிதம் அடைந்­தி­ருந்­த­ன. குறிப்­பாக வைத்­தி­ய­சாலை சேவைகள் முழு­மை­யாக பாதிப்­ப­டைந்­தி­ருந்­தன. 
மேலும் வீதி சமிக்ஞை விளக்­குகள் இயங்­க­வில்லை. இதன்­கா­ர­ண­மாக பிர­தான நக­ரங்­களில் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­தது. அதே­போன்று ரயில் சேவை­களும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டன. அது­மாத்­தி­ர­மின்றி பெற்றோல் நிலை­யங்­களும் ஹோட்­டல்­களும் மாலை பொழு­தி­லேயே மூடப் ­பட்­டன. இதன் கார­ண­மாக மக்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டனர்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நாடு­பூ­ரா­கவும் நேற்று பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் திடீ­ரென மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­டது. இத­னை­தொ­டர்ந்து சில இடங்­களில் மாலை 5 மணி­ய­ளவில் விநி­யோகம் வழ­மைக்கு திரும்­பி­யது.

இருப்­பினும் பெரும்­பா­லான இடங்­களில் இரவு 7 மணிக்கு வழ­மைக்கு திரும்­பி­னாலும் மீளவும் நாடு முழு­வ­திலும் மின் விநி­யோகம் தடைப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இரவு 9 மணி தொடக்கம் 10 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தி­களில் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் மின் விநி­யோகம் வழ­மைக்கு திரும்­பி­யி­ருந்­தது.

6 மாதங்­களில் 3 தடவை மின்­வி­நி­யோகம் தடை

இந்­நி­லையில் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிறகு மூன்று தட­வைகள் நாடு­பூ­ரா­கவும் மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­டது. இந்த வரு­டத்தில் மாத்­திரம் இரண்டு தட­வைகள் விநி­யோகம் தடைப்­பட்­டது. இதன்­படி கடந்த மாதம் 25 ஆம் திகதி விக்­டோ­ரியா நீர்மின் நிலை­யத்தில் மின்னல் தாக்­கத்­தினால் ஏற்­பட்ட தொழில்­நுட்ப கோளாறின் கார­ண­மாக இரண்­டரை மணி­நேரம் நாடு முழு­வதும் மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­டது. இத­னை­ய­டுத்து நேற்­றைய தினம் பிய­கம மின்­உற்­பத்தி நிலை­யத்தில் உயர் மின் அழுத்தின் விளை­வாக ஏற்­பட்ட தொழில்­நுட்ப கோளாறின் கார­ண­மாக ஏழரை மணி­நேரம் மின் துண்­டிக்­கப்­பட்­டது.
இருந்­த­போ­திலும் நேற்­றைய தினம் 10.30 மணி­ய­ளவில் பெரும்­பா­லான இடங்­களில் நிலைமை வழ­மைக்கு திரும்­பி­யது. இதன்­படி கண்டி,கொழும்பு மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய பிர­தே­சங்­களில் 10 மணிக்கும், யாழ்ப்­பாணம் , வவு­னியா ஆகிய பகு­தி­களில் 10.30 மணிக்கும், திரு­கோ­ண­மலை ,மட்­ட­க­ளப்பு ஆகிய பகு­தி­களில் 10.10 மணி­ய­ள­விலும் மின் விநி­யோகம் வழ­மைக்கு திரும்­பி­யது.
மின்­சார சபையின் விளக்கம்
இது தொடர்பில் மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க அமைச்சின் செய­லா­ள­ரிடம் வின­விய போது, பிய­கம பிர­தே­சத்­தி­லுள்ள மின்­நி­லை­யத்தில் ஏற்­பட்ட கோளாறின் கார­ண­மாக மின் துண்­டிப்பு ஏற்­பட்­டது. எனினும் மூன்று நாட்­க­ளுக்கு மின்­வி­நி­யோ­கத்தில் சிக்கல் நிலைமை ஏற்­படும். அத்­துடன் நுரை­சோலை அனல் மின்­நி­லை­யத்தின் செயற்­பா­டுகள் மூன்று நாட்­க­ளுக்கு சிக்­க­லாக காணப்­படும் என்றார்.
நீர் விநி­யோ­கமும் தடை
இதே­வேளை நாடு­பூ­ரா­கவும் மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­ட­மை­யினால் பல்­வேறு பகு­தி­களின் நீர் விநி­யோ­கமும் தடைப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக மாத்­தறை , கொழும்பு மற்றும் புற­நகர் பகு­திகள், நுவ­ரெ­லியா போன்ற இடங்­களில் நீர் விநி­யோகம் தடைப்­பட்­டது. அத்­துடன் மின்­வி­நி­யோ­கத்தின் தடை­கா­ர­ண­மாக அம்­பத்­தலை மற்றும் பிய­கம நீர்­சுத்­த­க­ரிப்பு நிலை­யங்­களின் செயற்­பா­டுகள் முழு­மை­யாக பாதிப்­ப­டைந்­தி­ருந்­தன.
போக்­கு­வ­ரத்து சேவைகள் ஸ்தம்­பிதம்
அத்­துடன் மின்­வி­நி­யோக தடை­கா­ர­ண­மாக வீதி சமிக்ஞை விளக்­குகள் துண்­டிக்­கப்­பட்­ட­மை­யினால் கொழும்பு , கண்டி உள்­ளிட்ட பிர­தான நக­ரங்­களில் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டது. மேலும் ரயில் சேவை­களும் ஸ்தம்­பிதம் அடைந்து காணப்­பட்­டன. இதன்­கா­ர­ண­மாக பய­ணிகள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.

வைத்­திய சேவை­களும் பாதிப்பு இதே­வேளை அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­நாகல், பதுளை, நுவ­ரெ­லியா உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களின் பிர­தான வைத்­தி­ய­சா­லை­களில் மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­பட்­ட­மை­யினால் நோயா­ளி­களும் பெரும் அசௌ­க­ரி­யங்கள் எதிர்­கொண்­டனர்­களும் பாதிப்பு இதே­வேளை நேற்று மின்­வி­நி­யோகம் தடைப்­பட்­ட­மை­யினால் கொழும்பு ,கண்டி மற்றும் காலி உள்­ளிட்ட பிர­தான நக­ரங்­களில் ஹோட்­டல்கள் மாலை பொழுதில் மூடப்­பட்­ட­மை­யினால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டது. மேலும் இரவு நேரங்­களில் பெற்றோல் நிலை­யங்கள் வெகு சீக்­கி­ரத்­துடன் மூடப்­பட்­ட­மை­யினால் பெற்றோல் நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில் நீண்ட வாகன நெரி­சலை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

மின்­சார சபை தலைவர் இரா­ஜி­னாமா

நாடு­பூ­ரா­கவும் ஆறு­மா­தங்­களில் இது­வரை மூன்று தட­வைகள் மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­பட்­டன. இந்­நி­லையில் நேற்று பாரிய மின்­துண்­டிப்பு ஏற்­பட்­ட­தனை அடுத்து இலங்கை மின்­சார சபையின் தலைவர் அநுர விஜ­ய­பால தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­துள்ளார். இதன்­படி இன்­றைய தினம் அதற்­கான இரா­ஜி­னாமா கடி­தத்தை அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளார். மின் பொறி­யியல் துறையில் 20 வருட அனுபவத்தை பெற்ற இவர் , 2011 ஆம் ஆண்டு மின்சார சபையின் உபதலைவர் பதவியிலிருந்தமை குறிப்பிடதக்கது.

அமைச்சர் தலைமையில் இன்று விசேட சந்திப்பு

நாடுபூராகவும் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிப்பு குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார். மேலும் இன்று காலை 10 மணிக்கு அமைச்சில் விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றவுள்ளது. தொடர் மின் துண்டிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
« PREV
NEXT »

No comments