Latest News

March 02, 2016

மஹிந்­த­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதா? மத்­திய குழு தீர்­மா­னிக்கும் என்­கி­றது சுதந்­திரக்கட்சி
by admin - 0

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இரண்டு தலை­வர்­க­ளுக்கு இட­மில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­வ­ராக இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. கட்­சியின் அங்­கத்­த­வர்கள் அல்­லா­த­வர்­களும் கட்­சியை விட்டு ஓரங்­கட்­டப்­பட்­ட­வர்­க­ ளுமே இன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை வீழ்த்த முயற்­சிக்­கின்­றனர் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எமது தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தவ­றாக விமர்­சித்­த­மைக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் கட்­சியின் மத்­தி­ய­குழு தீர்­மா­ னிக்கும். கட்­சியில் உள்ள அனை­வ­ருக்கும் தீர்­மானம் பொது­வா­னது எனவும் குறிப்­பிட்­டனர்.
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­ பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­சர்­க­ளான மஹிந்த சம­ர­சிங்க, லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன ஆகியோர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­விக்­கையில்,
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்தை கட்­டா­யத்தின் பெய­ரிலோ தனக்­குள்ள அதி­கா­ரத்தின் மூலமோ பெற்­றுக்­கொள்­ள­வில்லை. அவர் கட்­சியை விட்டு வெளி­யே­றி­னாலும் கட்­சியின் கொள்­கைக்கு அமை­யவும் சட்­டத்தின் பிர­கா­ரமும் அவர் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அங்­கத்­த­வ­ரா­கவே உள்ளார். அதேபோல் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்ற பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்தை ஆத­ரித்­தனர். கட்­சியின் உறுப்­பி­னர்கள் வேண்­டுகோள் விடுத்த பின்­னரே அவர் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுக்­கொண்டார்.

ஒரு­சிலர் தமது தனிப்­பட்ட நோக்­கங்­களை மாத்­திரம் கருத்­தில்­கொண்டு சுய­ந­ல­மாக செயற்­ப­டு­வ­துடன் கட்­சியை வீழ்த்­து­வது மட்­டு­மல்­லாது ஜனா­தி­ப­தியின் காலை­வாரும் செய­லையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். யாரும் ஏற்­றுக்­கொள்­ளாத, பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­ய­கரால் கூட ஏற்­றுக்­கொள்­ளாத பொது எதி­ர­ணி­யினர் என்ற குழு­வினர் இன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் வீழ்ச்­சியை விரும்­பு­கின்­றனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இருந்­து­கொண்டு தலை­மைத்­து­வத்தை வீழ்த்த கடு­மை­யாக முயற்­சித்து வரு­கின்­றனர்.

ஆனால் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என்று கூறும் அணியில் எத்­த­னைபேர் உள்­ளனர். சிறு­சிறு கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் ஒரு சிலர் மாத்­திரம் தலை­மை­தாங்கும் இந்த அணியில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்று எவரும் அங்கம் வகிக்க முடி­யாது. இந்த அணி­யினர் கூட ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டுக் கட்­சி­யா­கவே இருக்­கின்­றனர். ஆகவே இவர்­களை வைத்து மஹிந்­தவோ அல்­லது பசில் ராஜபக் ஷவோ கட்­சியின் தலை­மைத்­து­வத்தை கைப்­பற்ற நினைப்­பது சாத்­தி­ய­மில்­லாத விட­ய­மாகும்.
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இரண்டு தலை­வர்கள் இல்லை. இரண்டு தலை­மைத்­து­வத்தை ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் அதன் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே தலை­வ­ராவார். கட்­சியின் கொள்­கைக்கு அமை­யவும், அர­சியல் சட்­டத்­திற்கு அமை­யவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கட்­சியை தலை­மை­தாங்க முடியும். அவ்­வாறு இருக்­கையில் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் அல்­லா­த­வர்­களும் கட்­சியை விட்டு ஓரம்­கட்­டப்­பட்­ட­வர்­க­ளுமே இன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை வீழ்த்த பார்க்­கின்­றனர்.
கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­றுக்­கொண்ட பின்னர் அவர் நினைத்­தி­ருந்தால் இன்று கட்­சிக்குள் இருந்து குழப்பம் விளை­விக்கும் அனை­வ­ரையும் கட்­சியை விட்டு வெளி­யேற்றி இருக்க முடியும். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவிற்கு கடந்த பொதுத் தேர்­த­லின்­போது போட்­டி­யிட அனு­ம­திக்­காது நிரா­க­ரித்­தி­ருக்க முடியும். ஆனால் அவர் அவ்­வாறு செய்­யாது ஒரு சந்­தர்ப்­பத்தை கொடுத்து கட்­சிக்குள் இணைத்­துக்­கொள்­ளவே முயற்­சித்தார்.
நாம் கடந்த முறை தோல்­வி­ய­டைந்த பொதுத்­தேர்­தலை தலைமை தாங்­கி­யது மஹிந்த ராஜபக் ஷவே­யாகும். அதை மறந்­து­விட முடி­யாது. இந்த தேர்­தலின் போதும் நாம் தோற்­க­வில்லை அவரால் தோற்­க­டிக்­கப்­பட்டோம். அதுவே உண்­மை­யாகும். இது எனது தனிப்­பட்ட கருத்­தாகும். அவர் கட்­சியை பலப்­ப­டுத்­தாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு தெரி­வித்த ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களை தோற்­க­டிக்­கவே பிர­சாரம் செய்தார். அந்த செயற்­பா­டுகள் தான் நாம் பொதுத் தேர்­தலில் தோல்­வியை சந்­திக்­கவும் கார­ண­மாகும்.
எம்மை பொறுத்­த­வ­ரையில் கட்­சிக்குள் இப்­போதும் இரண்டு தலை­வர்கள் இல்லை. எமது தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­டு­மே­யாகும். அவ்­வாறு இருக்­கையில் இப்­போது மஹிந்த ராஜபக் ஷ எமது தலை­வரை விமர்­சித்து தவ­றான கருத்­துக்­களை முன்­வைக்­கின்றார். இந்த விமர்­ச­னங்­களை எம்மால் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதை நாம் கடு­மை­யாக கண்­டிக்­கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆத­ரவில் வாழ்ந்­து­கொண்டு கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காலை­வாரும் செயலை இவர் செய்­கின்றார். அதேபோல் இவர்­களின் இன­வாதக் கருத்­து­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்­றது. எமது கட்­சியின் கொள்­கையும் அது­வே­யாகும். நாம் தமிழ், முஸ்லிம் சிங்­கள மக்கள் அனை­வ­ரையும் ஆத­ரித்து செயற்­ப­டவே விரும்­பு­கின்றோம் என்றார்.

அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே­ய­வர்­தன செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டும் செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியின் மத்தியகுழு, மற்றும் கட்சியின் கொள்கைக்கு அமைய கட்சியை விமர்சிப்போர் கட்சியின் தலைவரை விமர்சிப்போர் என அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும். கட்சியில் உள்ள அனைவருக்கும் தீர்மானம் பொதுவானது என்றார்.
« PREV
NEXT »

No comments