Latest News

March 06, 2016

செல்வன் ஜெயராஜ் அவர்களின் தனிப்பட்ட அனுசரணையோடு அரும்புகள் நிறுவனம் பயனாளிக்கு வாழ்வாதார உதவி
by admin - 0

அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனமானது சென்ற மாத பயனாளியான திருமதி உதயதகுமாரி என்பவரை தெரிவு செய்தது.

இவர் இறுதி யுததில் தனது கணவரை இழந்து தனது இரு குழந்தைகளுடன் பல கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் இவர் தான் சொந்தமாக ஒரு சுய தொழிலை செய்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தையல் இயந்திரத்தை அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனத்திடம் கேட்டிருந்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று பிரித்தானியா வாழ் உறவான செல்வன் ஜெயராஜ் அவர்களின் தனிப்பட்ட அனுசரணையோடு அவர் கேட்ட தையல் இயந்திரத்தை வளங்கியதோடு சகோதரன் ஜெயராஜ் விருப்பப்படி பயனாளி தனது சொந்த முயற்சியில் எதிர்கால நலன் கருதி ஒரு சிறு தொகையாவது சேமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஊக்குவிற்கும் வகையில்அவரின் சேமிப்பில் சிறிய ஊக்குவிப்பு தொகையினை வைப்பீடு செய்து உதவி செய்துள்ளது.
:
உதவும் மனப்பான்மை கொண்ட சகோதரன் ஜெயராஜ் தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் பயனாளி உதயதகுமாரிக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள் இன்னமும் நிலையாய் ஒர் இடத்தில் தான் வாழ அனுமதி இல்லாத நிலையிலும் சிறுக சிறுக சேமித்த பணத்தில் இன்னும் ஒருவர் வாழ்வை மலர செய்த சகோதரன் ஜெயராஜ் அவர்களுக்கு அரும்புகள் நிர்வாகம் எமது தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் உதவி வளங்க விரும்புகின்ற நல்ல உள்ளங்கள் எம்மிடம் 25 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதார உதவிக்காகா எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் நீங்கள் உதவி செய்ய விரும்பும் பட்சத்தில் எம்மை அணுகலாம்
"அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"
நன்றி

« PREV
NEXT »

No comments