Latest News

February 25, 2016

அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு மேல் பாரிய எரிகல் வெடிப்பு
by admin - 0

அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­திற்கு மேலாக வளி­மண்­ட­லத்தில் பாரிய எரி­கல்­லொன்று வெடித்துச் சித­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது 2013ஆம் ஆண்டு ரஷ்­யாவின் செல்­யபின்ஸ்க் பிராந்­தி­யத்­திற்கு மேலாக வளி­மண்­ட­லத்தில் எரி­கல்­லொன்று வெடித்துச் சித­றிய சம்­ப­வத்­துக்கு பின் இடம்­பெறும் மிகப்­பெ­ரிய எரிகல் வெடிப்புச் சம்­ப­வ­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

கடந்த 6ஆம் திகதி இடம்­பெற்ற மேற்­படி புதிய எரிகல் வெடிப்பு சம்­பவம் தற்­போதே வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இந்த எரிகல் வெடிப்பின் போது 13,000 தொன் வெடி­பொருள் வெடிப்­ப­தற்குச் சம­மான சக்தி வெளிப்­பட்­டுள்­ளது.

ரஷ்­யாவில் இடம்­பெற்ற எரிகல் வெடிப்பு சம்­ப­வத்தின் போது 500,000 தொன் வெடி­பொருள் வெடிப்­ப­தற்கு சம­மான சக்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த சம்­ப­வத்தில் 1,000க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தி­ருந்­தனர்
.
இந்­நி­லையில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துக்கு மேலாக இடம்­பெற்ற எரிகல் வெடிப்பு சம்­பவம் எவ­ரது கவ­னத்­தையும் கவ­ராத வகையில் இடம்­பெற்­றுள்­ளது.

பிரே­சி­லிய கடற்­க­ரை­யி­லி­ருந்து 1,000 கிலோ­மீற்றர் தொலைவில் சமுத்திர மேற்பரப்பிலிருந்து 30 கிலோமீற்றர் உயரத்தில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments