Latest News

February 24, 2016

குழப்ப வேண்டாம் சகல கட்சிகளிடமும் சம்பந்தன் வேண்டுகோள்
by admin - 0

புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்ள நிலையில் அப்­ப­ணி­களை யாரும் குழப்­பு­வதோ அல்­லது கால­தா­ம­தப்­ப­டுத்­து­வதோ கூடா­தென எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அர­சியல் கட்­சி­க­ளி­டத்தில் கோரிக்கை விடுத் தார்.

பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது குறித்த பிரே­ரணை மீது நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற விவா­தத்தின் போது ஆளும் தரப்­புக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் இடையில் தர்க்கம் ஏற்­பட்­டது. இதன்­போதே எதிர்க்­கட்சித் தலைவர் மேற் ­கண்­ட­வாறு தெரி­வித் தார்.
அவர் சபையில் மேலும் தெரி­விக்­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொட ர்­பாக நாம் இங்கு விவா­தித்துக் கொண்­டி­ருக்­கிறோம். 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பை கைவிட வேண்டும். அதில் உள்ள பல விட­யங்கள் ஏற்­பு­டை­ய­ன­வல்ல. அதனால் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வி­டயம் அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதற்­கான இணக்­கப்­பாடும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நிறை­வேற்று அதி­கார முறையை நீக்­குதல், புதிய தேர்தல் முறை உரு­வாக்கம் போன்ற விட­யங்கள் குறித்தும் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. எனவே இதனை யாரும் குழப்­பவோ, தாம­தப்­ப­டுத்­தவோ கூடாது என்றார்.
நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றி­ய­மைப்­பது குறித்த பிரே­ரணை மீதான விவாதம் நடை­பெற்­ற­போது அதில் ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி உரை­யாற்­றினார்.
இதன்­போது அவர் குறிப்­பி­டு­கையில்
ஜனா­தி­பதித் தேர்தல் நிறை­வ­டைந்து ஒரு­வ­ருடம் நிறை­வ­டைந்த நிலையில் கடந்த ஜன­வரி மாதம் ஒன்­பதாம் திகதி பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­ய­மைப்­பது குறித்த பிரே­ரணை சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 12 ஆம் திகதி அப்­பி­ரே­ரணை மீதான விவாதம் நடத்­தப்­பட்­டது. அதன்­பின்னர் அப்­பி­ரே­ரணை மீதான விவாதம் பிற்­போ­டப்­பட்­டது. பெப்­ர­வரி 25 ஆம் திகதி மீண்டும் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­டு­வ­தாக கூறி­னார்கள். ஆனால் திடீ­ரென நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை காலையில் கூடி முடி­வெ­டுத்து தற்­போது விவா­தத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். இவ்­வாறு திடீ­ரென விவா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு என்ன காரணம்? மறு­பக்­கத்தில் இப்­ப­ரி­சோ­தனை மீதான வாக்­கெ­டுப்பை நடத்­து­வது தாம­த­மா­கு­மெ­னவும் கூறு­கின்­றார்கள். அதற்கு என்ன காரணம்?

அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக பொது மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் பணி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. மக்கள் கருத்­துக்கள் முக்­கி­ய­மா­னவை என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். எனினும் மக்கள் ஆணை பெற்ற இச்­ச­பையில் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக மாற்­று­வ­தற்கு கருத்­துக்­களை முன்­வைத்து விவா­திக்­கப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்தில் அங்­கத்­து­வத்தைக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் இணக்­கப்­பாடு காணப்­ப­டு­மாயின் இப்­பி­ரே­ரணை நிறை­வேற்­று­வதில் பிரச்­சினை இருக்­காது. உண்­மை­யி­லேயே அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பாடு இல்லை. இதன் கார­ண­மாக விவாதம் என்ற பெயரால் காலத்தைக் கடத்தும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்றார்.

இதன்­போது குறுக்­கிட்ட அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன, ஜன­நா­யக நடை­மு­றை­களை கடைப்­பி­டிக்க வேண்டும். அந்த நடை­மு­றை­களின் அடிப்­ப­டை­யி­லேயே கருத்­து­களை கேட்­ட­றிந்து விவா­தங்கள் நடத்­து­வ­தற்­கு­ரிய நடை­மு­றைகள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்­றன என்றார்.

அப்­போது குறுக்­கிட்ட ஜே.வி.பி. தலை­வரும் எம்.பி.யுமான அநு­ர­தி­ஸா­நா­யக்க, அர­சாங்கம் திடீ­ரென விவா­தத்தை எடுத்துக் கொண்­ட­மைக்கு என்ன காரணம். காலத்தை வீண­டிக்­காது அர­சாங்­கத்­திற்கு ஒன்­று­பட்ட நிலை காணப்­பட்­டது. இப்­பி­ரே­ர­ணையை இன்று நிறை­வேற்ற முடியும் என்­பதை வலி­யு­றுத்­தினார்.
அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன மீண்டும் ஜன­நா­யக நடை­மு­றை­களின் பிர­காரம் அனை­வ­ரி­னதும் கருத்­து­களை உள்­வாங்க வேண்டும் என்­பதைச் சுட்­டிக்­காட்­டினார்.
இதன்­போது சுனில் ஹந்­துன்­நெத்தி எம்.பி.நாங்கள் žஜன­நா­யக நடை­மு­றை­களை வர­வேற்­கின்றோம். ஆனால் மக்கள் கருத்­துக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக பெறப்­படும் அதே­நேரம் பிரே­ரணை மீது விவா­தங்­களை நடத்தி கால­வி­ர­யத்தை ஏன் செய்ய வேண்டும். உண்­மை­யி­லேயே பிரே­ர­ணையை இன்றே (நேற்று) நிறை­வேற்­று­வ­தற்கு முடியும். ஆனால் உங்­க­ளுக்குள் (அர­சாங்­கத்­திற்குள்) இணக்­கப்­பாடு இல்லை. பிர­தமர் ஒரு கருத்தை கூறு­கின்றார். அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த வேறொரு கருத்தை முன்­வைக்­கின்றார் என்றார்.
அதன்­போது எழுந்த அநுர திஸா­நா­யக்க எம்.பி. அர­சாங்­கத்தின் கருத்து ஒன்­றாக இருக்க வேண்டும். இவ்­வா­றான வேறு­பட்ட கருத்­துக்கள் வெளி­வ­ரு­கின்­ற­மையின் மூலம் உங்­க­ளுக்குள் உள்ள முரண்­பா­டு­களை இவ்­வி­ட­யத்தில் வெளிப்­ப­டுத்­து­கின்­றீர்கள் என்றார்.

இதன்­போது எழுந்த எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் நாம் தீர்­மா­னத்தின் மீது விவாதம் நடாத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். 1978 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பை கைவி­ட­வேண்­டு­மென அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்ற வேண்டும் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி அனை­வரும் ஒன்­றி­ணைந்­துள்ளோம். அதில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தாது தற்­போது ஏற்­பட்­டுள்ள தக்க தரு­ணத்தை பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென வலி­யு­றுத்­தினார்.

இத­னை­ய­டுத்து ஜே.வி.பி.எம்.பி. சுனில் ஹந்­துன்­நெத்தி நிறை­வேற்று அதி­கா­ரங்­களை குறைத்தல், இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை ஏற்­ப­டுத்தல், தேர்தல் முறை­மையில் மறு­சீ­ர­மைப்பு போன்ற விட­யங்­களில் எமக்கு எந்தப் பிரச்­சி­னையும் கிடை­யாது. அதனை நாமும் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆனால் இங்­குள்ள பிரச்­சினை அவ­ச­ர­மாக இந்த விவா­தத்தை பய­னின்றி முன்­னெ­டுக்க முடி­யாது என்­ப­தாகும். அர­சாங்க கட்­சி­க­ளுக்குள் பொது இணக்­கப்­பாடு காணப்­ப­டு­மாயின் இப்­பி­ரே­ரணை இன்றே நிறை­வேற்­றலாம். நாம் காலம் தாழ்த்திச் செல்­வதை விரும்­ப­வில்லை என்றார்.

இதன்­போது அமைச்சர் ஜோன் சென­வி­ரட்­டன கலந்­து­ரை­யா­டாது பிரே­ரணை மீது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால் கலந்­து­ரை­யாட இட­ம­ளிக்­க­வில்­லை­யெனக் கூறு­வீர்கள் என்றார்.

அதன்­போது குறுக்­கிட்ட சுனில் ஹந்­துன்­நெத்தி மற்றும் அநுர திஸா­நா­யக்க எம்.பி.கள் வாக்­கெ­டுப்பை நடத்­து­வதில் உங்­க­ளுக்கு என்ன பிரச்­சி­னை­யுள்­ளது. ஏன் கால தாம­தத்தைச் செய்­கின்­றீர்கள். இந்த விவாதம் இன்­றுடன் நிறை­வ­டையப் போவதில்லை. நாளையும் தொடரும் என குறிப்பிட்டார்.

அதன்போது சபை முதல்வர் வருகை தந்ததும் உங்களுக்கு பதிலளிப்பார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

அதனையடுத்து கருத்துக்களை முன்வைத்த சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இங்குள்ள 225 பேரை தவிர இங்கு வேறு எவரும் புதிதாக வந்து கருத்துக்களை முன்வைக்க முடியாது. ஆகவே இங்குள்ள அனைவரும் இணங்குகின்றபோது இதனை அங்கீகரிக்க முடியும்.

உண்மையிலேயே இந்த பாராளுமன்றம் மக்களுக்கு எதனைக் கூற முயற்சிக்கின்றது. உண்மையில் ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். இதன்போது கருத்து வெளியிட்ட பிரதிசபாநாயகர் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் கருத்துகளை முன்வைக்க முடியும். மாறாக அவற்றை மாற்றியமைக்க முடியாது என்றார்.
« PREV
NEXT »

No comments