Latest News

February 23, 2016

ஜேர்­மன் முறைமை குறித்து பரிசீலிக்க கூட்டமைப்பு தயார் பேச்சாளர் சுமந்திரன் கூறுகிறார்
by admin - 0

ஜேர்­மனியில் சிறந்­த­தொரு சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்­சி­முறை­மையே காணப்­படு­கின்­றது. அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக அத்­த­கைய ஆட்­சி­முறைமையை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு உடன்­பட்டால் நாம் அதனை பரி­சீ­லிப்­ப­தற்குத் தயா­ரா­க­ இ­ருக்­கின்­றோ­ம் என்று எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்வு விவ­காரம் தொடர்பில் ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளியிட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்தின் ஏற்­பா­டு­களும் மாகா­ண­சபை முறை­மையின் ஏற்­பா­டு­களும் அவ்­வாறே இருக்கும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் அர­சி­ய­ல­மைப்பில் என்ன இருக்­கின்­றதோ, அது தொடர்ந்தும் இருக்கும். எனினும் தீர்வு முறை என்று வரும்­போது நாங்கள் ஜேர்மன் முறைமை தொடர்பில் ஆராய்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். அத்­துடன் வேறு­பல முறை­மைகள் குறித்தும் ஆராய்­வோ­மென குறிப்­பிட்­டி­ருந்தார்.
இவ்­வி­டயம் தொடர்­பாக கருத்­து­வெ ளியி­டு­கை­யி­லேயே, கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், வட­கி­ழக்கின் பெரும்­பான்மை ஆணை பெற்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்­காகு எத்­த­கைய தீர்­வொன்றை வழங்­க­வேண்­டு­மென்­பதை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளிவாக குறிப்­பிட்­டுள்ளோம்.

அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்று எட்­டப்­ப­டு­வது குறித்த சில நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மையை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இந்­நி­லையில் ஜேர்மன் ஆட்­சி­மு­றைமை குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜேர்மன் ஆட்சி முறை­யென்­பது சமஸ்டிக் கட்­ட­மைப்பை உள்­வாங்­கிய சிறந்த ஆட்­சி­மு­றை­மை­யாகும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக அர­சாங்கம் ஜேர்மன் முறை­மைக்கு உடன்­ப­டு­மா­க­வி­ருந்தால் நாம் அது­கு­றித்து பரி­சீ­லிப்­ப­தற்கு தயா­ரா­க­வி­ருக்­கின்றோம்.
அதே­நேரம் அர­சியல் தீர்வு விடயம் சம்­பந்­த­மாக ஜேர்மன் முறைமை குறித்து அல்­லது வேறெந்த முறை­மைகள் குறித்தும் எமக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் எவையும் இடம்­பெ­ற­வில்லை என்றார்.
இதே­வேளை இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதில் அனைத்து தரப்­புக்­களும் உறு­தி­யாக இருக்­கின்ற இத்­த­ரு­ணத்தில் ஒற்­றை­யாட்­சிக்­குள்ளே தீர்வு எட்­டப்­ப­ட­வேண்­டு­மென தென்­னி­லங்கை அர­சியல் சக்­திகள் சில உறு­தி­யா­க­வுள்­ளன. அதே­வேளை சமஸ்டி முறை­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சைக்­கான தீர்வு எட்­டப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் உறு­தி­யா­க­வுள்­ளது.
எவ்­வா­றா­யினும் அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி, சமஸ்டி போன்ற சொற்­ப­தங்­களை நேர­டி­யாக பயன்­ப­டுத்­தாது அதன் கருப்­பொ­ருட்­களை கொண்­ட­மைந்த கட்­ட­மைப்பை பயன்­ப­டுத்­து­வது குறித்து கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.


இவ்­வா­றி­ருக்­கையில் அண்­மையில் கருத்து வெளியிட்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண, கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் அடை­யா­ளங்கள் அவ­சி­ய­மில்லை. கருப்­பொ­ருட்­களே முக்­கி­ய­மா­ன­வை­ என்ற தெனியில் கருத்­தக்­களை வெளியிட்­டி­ருந்­தனர்.


அதே­நேரம் தமிழ் மக்கள் பேரவை உட்பட சில தமிழ் அரசியல் தரப்புக்கள் அடையாளங்கள் என்னவென்பது தௌிவாக அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும். அவ்வாறு உள்ளடக்கப்படுவது தவிர்க்கப்படின் அது சிறுபான்மையினரின் நிரந்தர பாதுகாப்புக்கு பலவீனமானதாகவே அமையுமென வலியுறுத்தி வருவதோடு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments