Latest News

February 24, 2016

ஞானசார தேரருக்கு பிணை
by admin - 0

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை பிணையில் செல்ல நீதி­மன்றம் நேற்று அனு­ம­தி­ய­ளித்­தது. இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் செல்­லவே ஹோமா­கம பிர­தான நீதிவான் ரங்க திஸா­நா­யக்க இவ்­வாறு அனு­மதி வழங்­கினார். 

அத்­துடன் பிரகீத் எக்­னெ­லி­கொட வழக்­கிலோ அல்­லது அவ­ரது மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை தொடர்­பி­லான வழக்­கிலோ சாட்­சி­க­ளுக்கு எவ்­வி­தத்­திலும் அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடாது என எச்­ச­ரித்த நீதிவான், இது குறித்து விசா­ரணை
செய்­து­வரும் அதி­கா­ரிகள், வழக்­குடன் தொடர்­பு­பட்ட சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளிட்ட அரச அதி­கா­ரி­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடாது எனவும் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

சந்­தியா எக்­னெ­லி­கொ­ட­வுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று பிற்­பகல் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன. இதன் போது ஞான­சார தேரர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விஜய ஹெட்டி ஆரச்சி தலை­மையில் மூன்று சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் ஆஜ­ரா­கினர். முறைப்­பாட்­டாளர் சந்­தியா எக்­னெ­லி­கொட சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி உபுல் கும­ரப்­பெ­ரு­ம­வுடன் சட்­டத்­த­ரணி லஹிரு கலப்­பதி மன்றில் பிர­சன்­ன­மா­கினர். சட்ட மா அதிபர் மற்றும் விசா­ர­ணை­யாளர் தரப்பில் சிரேஷ்ட அரச சட்ட வாதி ஜனக பண்­டார மற்றும் ஹோமா­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் லிய­னகே ஆகியோர் மன்றில் ஆஜ­ராகி இருந்­தனர்.

நேற்று இது குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தை­யொட்டி நீதி­மன்ற வளா­கத்தில் பாது­காப்பு பலப்ப்­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. நீதி­மன்­றிக்கு வழக்கு நட­வ­டிக்­கை­களை பார்ப்­ப­தற்­காக வருகைத் தர முயன்ற தேரர்கள் பல­ருக்கு மன்றின் வளா­கத்­துக்குள் நுழைய அனு­மதி மறுத்த பொலிஸார் கலகத் தடுப்பு மற்றும் ஆயுதம் தரித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் ஊடாக இரண்­ட­டுக்கு பாது­காப்பு நட­வ­டிக்­கை­யினை அப்­ப­கு­தியில் அமுல் செய்­தனர்.

வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பம்­மான போது, சந்­தேக நப­ரான ஞான­சார தேரர் தொடர்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் கருத்­துக்­களை முன் வைக்க ஆரம்­பித்­தனர். 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்­கப்ப்ட்டோர் மற்றும் சாட்­சிகள் பாது­காப்பு சட்­டத்தின் கீழ் ஞான­சார தேர­ருக்கு எதி­ரான குறித்த முறைப்­பாட்டை விசா­ரணை செய்ய முடி­யாது எனவும் அதனால் அவ­ருக்கு பிணை வழங்­கு­மாறும் அவர்கள் கோரினர்.
எனினும் சாட்­சிகள் பாது­காப்பு சட்­டத்தின் கீழ் விசா­ரணை செய்ய முடி­யாது, வழக்கு தொடர முடி­யாது என்ற கருத்­துக்­களை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க நிரா­க­ரித்தார்.
அத்­துடன் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­ட­வாதி, ஜனக பண்­டா­ரவும் சந்­தேக நபர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­களின் வாதத்­துக்கு எதிர்ப்பு வெளி­யிட்டார். சாட்­சிகள் பாது­காப்பு சட்­டத்தின் கீழ் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்­வதா இல்­லையா என்­பது குறித்து இது­வரை சட்ட மா அதிபர் தீர்­மா­னிக்­காத நிலை­யிலும் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலை­யிலும் தற்­போ­தைய வழக்கின் நில­மையை மட்டும் கருத்தில் கொண்டே நீதிவான் பிணை குறித்து முடி­வெ­டுக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
இந் நிலையில் முன்னாள் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ஏ.டப்­ளியூ.ஏ. சலாம் மற்றும் முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க ஆகியோர் விசா­ரித்து தீர்ப்பு வழங்­கிய இரு வழக்­குகள் ஊடாக வழங்­கப்ப்ட்ட அறி­வு­றுத்­தல்­களை சுட்­டிக்­காட்­டிய நீதிவான், முன் வைக்­கப்­பட்ட வாதங்­க­ளுக்கு அமை­வாக பிணை வழங்கத் தீர்­மா­னித்தார். முன்னாள் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ஏ.டப்­ளியூ.ஏ. சலாம் மற்றும் முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோரின் தீர்ப்­பு­களில் சந்­தேக நபர் ஒரு­வரின் சுதந்­திரம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்து பூரண ஆலோ­ச­னைகாள் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், சாட்­சிகள் பாது­காப்பு சட்­டத்தின் கீழ் சட்ட மா அதிபர் எதிர்­கா­லத்தில் இந்த சந்­தேக நப­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யவோ அல்­லது தாக்கல் செய்­யாது விடவோ இட­முள்ள நிலையில் தான் அவரை பிணையில் செல்ல அனு­ம­திப்­ப­தாக நீதிவான் அறி­வித்தார்.

அத்­துடன் மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் ஞான­சார தேர­ருக்கு எதீ­ராக சாட்­சிகள் பாது­காப்பு சட்­டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தால் அதன் பின்னர் பிணையை ரத்து செய்­வது அல்­லது அவரை விளக்­க­ம­றி­யலில் வைப்­பது குறித்து அந் நீதி­மன்றம் முடி­வெ­டுக்கும் எனவும், தனது முடிவு குறித்து அதி­ருப்தி இருப்பின் அதற்­கெ­தி­ராக மேன் முறை­யீடு செய்து சிறந்த தீவைப் பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்தே இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் செல்ல ஹோமா­கம பிர­தான நீதிவான் ரங்க திஸா­நா­யக்க இவ்­வாறு அனு­மதி வழங்­கி­ய­துடன் பிரகீத் எக்­னெ­லி­கொட வழக்­கிலோ அல்­லது அவ­ரது மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை தொட­பி­லான வழக்­கிலோ சாட்­சி­க­ளுக்கு எவ்­வி­தத்­திலும் அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடாது , இது குறித்து விசா­ரணை செய்­து­வரும் அதி­கா­ரிகள், வழக்­குடன் தொடர்­பு­பட்ட்ட சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளிட்ட அரச அதி­கா­ரி­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

பிணையை அடுத்து வெளியே வந்த ஞானசார தேரர், தொடர்ந்தும் தான் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பப் போவதாகவும், பிக்குகளுக்கு சட்டம் தொடர்பிலும் கற்கை நெறியொன்றினை வழங்க வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஹோமாகம நீதிவான் நீதிமன்ருக்கு செல்லும் பிரதான பாதையில் கூடியிருந்த பெளத்த தேரர்களால் ஞானசார தேர்ருக்கு பிரித் ஆசீர்வாத பூஜையும் நடத்தப்பட்டது. இதனையடுத்தே அவர் தனது விகாரையை நோக்கி தனது வாகனத்தில் சென்றார்.
« PREV
NEXT »

No comments