Latest News

January 31, 2016

அரசாங்கத்தை எச்சரிக்கும் மஹிந்தவின் கடைசி மகன்
by admin - 0

நிதி மோசடி குற்றச்சாட்டில் தமது சகோதரன் யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முகநூலில் தமது சகோதரன் கைதான புகைப்படத்தை பிரசுரித்து, ‘நல்லாட்சி அரசாங்கமே, சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டீர்கள். இனி, அந்த சிங்கம் உங்களை துண்டு துண்டாக கடித்து குதறாமல் விட்டுவிடும் என எதிர்பார்க்காதீர்கள்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, ரோஹித தாம் தமது இரண்டு சகோதரர்களுடன் தோன்றும் புகைப்படத்தை முகநூல் புகைப்படமாக மாற்றியுள்ளார்.
கார்ல்டன் விளையாட்டு அலைவரிசையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரண்டாவது மகனான யோஷித உள்ளிட்ட ஐவர் நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடை ரிமாண்ட் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments