தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
பலர் இதில் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் அரச ஊடகம் கூறுகின்றது.
ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம்.
முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்பது, லெபனானின் ஷியா அமைப்பான ஹெஸ்புல்லா மற்றும் இரான் ஆகியன அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது
No comments
Post a Comment