Latest News

January 27, 2016

ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் 10 பிக்குகள் தீக்குளிப்போம்"-பெற்றோலை கொடுக்க தயார் சிங்கள மக்கள் கருத்து
by admin - 0

இன்று இலங்கையில் பேசுபொருளான ஞானசார தேரர் கைது மற்றும் சில தேரர்களின் ஆர்பாட்டம், மிரட்டல்கள் சமூக வலைகளில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருவது அறிந்ததே.. இந்நிலையில் சிங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு முகநூல் பக்கமான "நியு சின்கல புத்திஸ்ட் " மற்றும் முகநூல் பாராளுமன்றம் என்ற குருப் போன்றவற்றில் பதிவான "ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் 10 பிக்குகள் தீக்குளிப்போம்" என்று  பதிவுக்கு சிங்கள சகோதரர்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கும் ..

 Nishanath Hewa : எனது செலவில் அவர்களுக்கு நான் பெட்ரோலை அருகிலேயே கொண்டு சென்று கொடுப்பேன். அவர்கள் விருப்பம் என்றால் நெருப்பை வைத்துக் கொள்ளட்டும். நாட்டை சாப்பிடும் திருடர்கள். 

Nimal Herath  : எல்லாத்துக்கு முதல்ல சிறைச்சாலைக்கு சாராய போத்தல் அனுப்புங்க. ஏன்னா சாராயம் இல்லாட்டி ஞானசார தீக்குளிச்சுடுவார். 

Chathuranga Kumara : உங்களின் இந்த மோசமான வேளைகலால்தான் எங்கள் மார்க்கத்துக்கும் கெட்ட பெயர். நீங்கள் 100 பேர் நெருப்பு வெச்சிக்கங்க.. நான் நாய்க்கு தானம் கொடுக்குறேன். 

Ajith Hettiarachchi : நெருப்பு வெச்சிக்கங்க 

Sameera Lanka : கலகொடயை சிறையில் போட்டது எவ்வளவு நல்லது . 

Sani Cham : ஹோமாகமையில் இன்னுமொரு மாட்டை பாபிக்யூ ( Barbecue) போட போறாங்க..

 Thushan Bandara : இவர்களிடம் இருந்து எமது பெளத்த மதத்தை காப்பாற்ற வேண்டும். 

Mahesh Gunawardana : எலகிரி 

Pradeep Mallawaarachchi : அதாவது நாளைக்கு இலங்கையில் மோசமான 10 பிக்குகள் இல்லாமல் போகிறார்கள். 

Roshan Lanka: (இந்த நபர் சின்ஹ லே படத்தை ப்ரோபைல் படமாக வைத்துள்ளவர்.) : பெட்ரோல் ஊற்றியா இந்த கழுதை நெருப்பு வைத்துக் கொள்கிறது. 

Suranga Jayathilaka: தலதா மாளிகையை சுற்றி கார் ரேஸ் ஓடி மதத்தை சீரழித்த போது ஏன் நெருப்பு வைத்துக் கொள்ளவில்லை. அப்பொழுது உங்களுக்கு இந்த அக்கறை எங்கு இருந்தது. -
« PREV
NEXT »

No comments