காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை என மட்டக்களப்பு தாயக மக்கள் மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தினால் இந்த காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மாத்திரம் எமது மட்டக்களப்பு தாயக மக்கள் மறுமலர்ச்சி அமைப்பு காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் தொடர்பாக 2000க்கு மேற்பட்டோரின் விண்ணப்பங்களை பெற்று காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தது. ஆனால் அதில் 450 பேருக்கு மேற்பட்டோரிடம் மாத்திரமே சாட்சியங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்த பலரும் ஆணைக்குழு மட்டக்களப்புக்கு வந்த போது அவர்களிடமும் விண்ணப்பித்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
காணாமல் போனோரை விசாரணை செய்யும் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடு திருப்தியளிப்பதாக இல்லை என்றார்.
No comments
Post a Comment