Latest News

December 03, 2015

இன்று அகவை காணும் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தியேழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
by admin - 0

இன்று அகவை காணும் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தியேழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீர்வை இளவல் ஈழம்ரஞ்சன்.

நல்லிரவின் கீதத்தை
நடுப்பகலின் கோவத்தை
காட்டுக்குள் இருக்கும்
வேங்கையை கவிதை என
சொல்லுக்குள் போட்டு தீ
மூட்டிய கவியரசே...
இன்று உனக்கு பிறந்த நாளாம் !
தாயக புதல்லவர்களை சீராட்டி
அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த
ஆசானே எட்டி விட்டாய் அகவையில்
ஒன்றால்...
உன்னை அவ்வளவு சுலபமாக எழுதி
விட என்னால் முடியாது..

என் பேனா முனையோ வன்னிப்பரப்பின்
புளுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று
நிதானம் இழந்து நடுக்கத்துடன் நிக்கிறது..
பாரதிக்கு பின் தமிழரின் பாட்டுக்கு
உரம் ஏற்றி தேரோட்டிய புலி வீரனே
நீ வெந்தனலா..?
வீசும் புயலா..?
ஆம் உன் கவிக்கு நிகர் ஏது..?
வையகப்பரப்பெங்கும் உன் கவி ஏராளம்
அதை கேட்ட செவிகள் என்ன தவம்
செய்ததுவோ...
தொட்டு தளுவிய உன் பெற்றவரும்
தாயக உறவுகளும் இணைந்து பாடும்

வாழ்த்து எட்டுகிறதா உன் காதுகளுக்கு..?
முப்படையும்,பிற்படையும்,வால்பிடித்தபடையும்
எப்படையும் வந்த போது வெற்றி சமர் ஆடிய
வேங்கைகளுக்கு நீ அளித்த கவி விருந்து
எம் நாவில் இன் நாளும்..

பண்பாடோடு கலைதனை பார்போற்ற
கோலோச்சி தாயே நிகரான எங்கள்
தாயகத்தை காதல் செய்து கவிபாடிய
முதுமையின் முத்தே..
புதுவை ஐயாவே...
உனக்கு திரையா..?

நீ வருவாய் என வழி பார்த்து
விழி நிரம்பி நிக்கின்றோம்
வந்து வீறாப்பாய் மிடுக்கோடு
கவி மாலை சூடு...

ஆம் பெரியவரே..
உருக்குலைந்து,உனை இழந்து
துடுக்கிழந்து,துயர் சுமந்து
குருடாகி,முடமாகி
சாவு மணி ஒரு பக்கம்
சத்துணவு ஒரு பக்கம்
யாருமற்ற ஏதிலியாய்
நீ இருக்கும் திசை அறியாமல்
மூச்சடங்கி முனங்குகிறோம்..

என்றும் நீ வாழ்க...உன் கவி வாழ்க..!
உன்னோடு கூடுகட்டி வாழ்ந்திருந்த
குருவிக்கூட்டம் நாங்கள் இன்று உனை
வாழ்த்துகிறோம் ஏற்றுக்கொள்..

பெரியவரே உங்களை என் கவியால்
(நீ/உன்) என வார்த்தைகளை அள்ளி
வீசி விட்டேன் மன்னிக்க மண்டியிட்டு
வேண்டுகிறேன் !

தாயக மண்வாசனை நிரம்பிய இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் கவியரசே!!

உங்கள் அன்பின்
நீர்வை இளவல் ஈழம்ரஞ்சன்.
« PREV
NEXT »

No comments