Latest News

October 26, 2015

கஞ்சா போதைப்­பொ­ரு­ளுடன் முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் இருவர் கைது
by admin - 0

அட்­டா­ளைச்­சேனை, அக்­க­ரைப்­பற்று பிர­தே­சங்­களில் கஞ்சா போதைப்­பொ­ரு­ளுடன் முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பிற்­பகல் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிசார் தெரிவித்­தனர்.

அம்­பாறை மாவட்ட போதைப்­பொருள் குற்­றத்­த­டுப்பு பிரிவு பொலி­சா­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து பொலிசார் அட்­டா­ளைச்­சேனை பிர­தான வீதியில் உள்ள பொலிஸ் சேவையில் இருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் வீட்டை சுற்­றி­வ­ளைத்து சோத­னை­யிட்ட போது வீட்­டி­லி­ருந்து 1 கிலோ 80 கிராம் கஞ்­சாவை (1080 கிராம்) கைப்­பற்­றி­ய­துடன் வீட்­டு­கா­ர­ரான முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரையும் கைது செய்­தனர்.
இதேபோல் அக்­க­ரைப்­பற்று பொலி­சா­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து பொலிசார் கடந்த வெள்ளிக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று நீத்தை வயல் பிர­தே­சத்தில் வைத்து சேவையில் இருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் பய­ணித்த மோட்டார் சைக்­கிளை நிறுத்தி சோத­னை­யிட்ட போது 105 கிராம் கஞ்­சாவை கைவிட்டு விட்டு மோட்டார் சைக்­கிளில் தப்பிச் சென்­றுள்ளார். தப்பிச் சென்­ற­வரை அக்­க­ரைப்­பற்று பொலிசார் மறுநாள் சனிக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று-1ஆம்­பி­ரிவு உப­த­பா­லக வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்­தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments