Latest News

October 26, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்று ஸ்ரீலங்கா பிரதமர் தலைமையில் கூட்டம்
by admin - 0

தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­காரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் இன்று விசேட கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது. இன்று மாலை 4 மணிக்கு அலரி மாளி­கையில் நடை­பெறும் இந்தக் கூட்­டத்தில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் திலக் மாரப்­பன, தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணேசன், புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் உட்­பட சட்ட மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்­களப் பிர­தி­நி­திகள் ஆகியோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­தலை கோரி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து அவர்­களின் விடு­தலை குறித்து ஆராய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த 19ஆம் திகதி விசேட கூட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது. இதன்­போது சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விப­ரங்­களை வழங்­கு­மாறு சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.
« PREV
NEXT »

No comments