இடம்பெயர்ந்துள்ள வலிகாமம் வடக்கு மக்கள் இந்த வருடத்தின் மார்கழி மாதத்திற்குள் மிளக்குடியமர்த்ப்படுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு இருந்த கெட்ட காலம் போய் தற்போது நல்ல காலம் வந்து கொண்டிருக்கின்றது. ஏனவே நல்லவைகள் பலவும் நடக்க இருக்கின்றது. ஆகவே அது வரை பொறுமையாக இருப்பொம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சம்மந்தன் நேற்று முன்தினம் நயினாதீவிற்கு வியைம் மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் வலிகாமம் வடக்கிற்கு விஐயம் செய்து அங்கு ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந் நிலையில் இன்றையதினம் வலி கிழக்கு மற்றும் வலி வடக்கு பகுதிகளுக்கும் விஐயம் செய்தார். இதற்கமைய இன்று காலை சந்நிதி முருகன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் வலி கிழக்கில் விடுவிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதிகளிற்குச் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது அங்குள்ள மக்கள் தமது பிரச்சனைகள் மற்றும் தேவைகள் என்பன தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்தக் கூறியதுடன் தமது உறவினர்களது காணிகளையும் விடுத்து அவர்களையும் மிளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வெண்டுமென்று கோரினர்.
இத்தகைய பிரச்சனைகள் தொடர்பில் நாம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி வருகின்றோம். இதற்கமைய இந்த வருட இறுதிக்கும் அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டு அனைவரும் மிளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
No comments
Post a Comment