Latest News

September 24, 2015

அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!
by Unknown - 0

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை என்பது இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், அவற்றில் உள்ள 12 விடயங்கள் நீக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இன்றையதினம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நண்பகல் வேளை வெளியிடப்படும் என கூறப்பட்டபோதிலும், பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் இன்றைய அமர்வு நிறைவு நேரத்திலேயே அது சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்தப்படவேண்டும் என பல நாடுகளும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் ரஸ்யா, சீனா, கியூபா,பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளக விசாரணையே நடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளன
« PREV
NEXT »

No comments