Latest News

November 20, 2014

தமிழரின் சொத்துக்களை கொள்ளையிடும் காவற்துறை
by admin - 0

ஸ்ரீலங்கா காவல்த்துறை உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படுவரால் 20 லட்சம் பணமும், 12 பவுண் நகையும் கொள்ளை 
ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் என்னுமிடத்தில் வசிக்கும் இலட்சுமிகாந்தன் சந்திரரூபன் என்பவரது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவதினம் நள்ளிரவு வேளையில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்தபோது சிலர் முகத்தை துணியால் மூடிக்கட்டியவாறு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அவர்களை எதிர்க்க முயன்றபோது திருடர்கள் வாளால் வெட்டியுள்ளனர். எனினும் அவர்களை எதிர்த்து கைகளில் அகப்பட்டபொருட்களால் தாக்கியபோது எதிர்பாராத விதமாக ஒரு திருடனின் முகத்தை மறைத்துக் கட்டியிருந்த துணி விலகிவிட்டது. அப்போது அவனை அடையாளம் கண்டு கொண்டனர் அந்த வீட்டிலிருந்தவர்கள்.  அடையாளம் காணப்பட்ட நபரையே சந்தேக நகராக பொலீசாரிடம் சந்திரரூபன் வாக்குமூலமளித்துள்ளார். 
அந்த நபர் ஒட்டுசுட்டானிலுள்ள ஸ்ரீலங்கா காவல்துறை நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்றும் சிறிது காலத்திற்கு முன்னரே இடமாற்றம் பெற்ற வேறு இடத்திற்குச் சென்றிருந்தவர் என்றும் அறிய முடிகின்றது.
« PREV
NEXT »

No comments