வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » போரால் பதிக்கப்பட்ட மாணவனின் மருத்துவத்துக்கு உதவிடுங்கள்

போரால் பதிக்கப்பட்ட மாணவனின் மருத்துவத்துக்கு உதவிடுங்கள்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போருக்குப் பின்னரான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவன் செல்வன் சோனமுத்து மோகன ரூபன் கற்சிலைமடு அ.த.க. பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். இவர் கல்வியை இழக்கும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளார்.
முள்ளந்தண்டு விலகல் நோயால் அந்த மாணவனது கல்வி, சமுக, சமய செயற்பாடுகள் யாவும் இழந்து செல்லும் நிலை யில் சிகிச்சையை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாக எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.மேற்படி சோனமுத்து மோகன ரூபனின் மருத்துவ செலவுக்காக 6 லட்சம் ரூபா உடனடியாகத் தேவைப்படுகிறது. எனினும் குறிப்பிட்டளவு நிதியே இதுவரை வங்கிகளில் கிடைத்துள்ளது.
இந்த நோக்கத்தை அடைவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு அன்புள்ளங்கள், உறவுகள் யாவரது நேசக்கரங்களை பாடசாலை அதிபரும், கல்வி சமுகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.இந்த மாணவனுக்கான சிகிச்சைக்காக உடனடியாக 16 ரைற் ரானியம் பெடிக்கல் ஸ்குரூ, 2 ரொட், 2 குறோஸ் கனக் ரேஷ் ஆகியவற்றை உடனடியாகத் தருவித்து வழங்கவேண்டிய நிலை இருப்பதால் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உதவுமாறு பாடசாலை அதிபரும், இதற்கு பொறுப்பான விஞ்ஞான ஆசிரியர் எஸ். புஸ்பரங்கனும் கோரியுள்ளனர்.
மேற்படி அவசர சிறப்பு உதவிச் செயற்பாட்டுக்காக முல் லைத்தீவு இலங்கை வங்கிக் கிளையில் கணக்கு இலக்கம் 72349038 எனும் கணக்கு ஆரம்பிக்கப் பட்டுள்ளது.உடன் உதவு திட்டத்தின் கீழ் உதவுமாறு சகலரையும் பாடசாலைச் சமூகம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi