Latest News

May 18, 2022

13 வருடங்கள் கடந்து செல்கிறது நீதி எங்கே?
by Editor - 0

13 வருடங்கள் கடந்து செல்கிறது நீதி எங்கே?
vivasaayi


சட்டம் ஒழுங்கு இல்லாத ஶ்ரீ லங்காத் தீவில் தமிழ் மக்கள் சந்திக்கும் தொடர்ச்சியான ஒடுக்குமுறை, அடக்குமுறை தமிழின அளிப்பு, நில அபகரிப்பு.

தமிழ் மக்கள் பிரிந்துசென்று தமது இறையாண்மையுடன் சுயாட்சியை அமைத்து சுதந்திர தமிழீழத்தில் வாழத் தகுதியுடையவர்கள் என்பது 1948ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தகாலத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குமுறைகளும் தமிழின அளிப்பும் சட்டத்தின்பால் நிரூபித்து நிற்கின்றது.

காலம்கடந்து ஞானம் பிறந்தது போன்று இன்று சிங்கள மக்கள் தமது சோத்துச்சண்டையில் தமிழ் மக்களுக்கு ஆதரவுபோன்று குரல் கொடுப்பதைப்பார்த்தால் சிங்கள அரசியல்வாதிகள் தொடக்கம் இராணுவம்வ்ரை பலதடவை நம்பவைத்து தமிழ் மக்களின் கழுத்தை அறுத்த சம்பவங்கள்தான் நினைவுக்கு வருகிறது அப்பொழுதெல்லாம் எந்த சிங்கள மக்களாக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும்சரி 2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் சந்தித்த கொடூர தமிழின அளிப்பு யுத்தத்தை தடுத்து நிறுத்தவோ, தமிழ் மக்களை பாதுகாக்கவோ எந்தவகையான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை சிங்கள மக்களும் புனித இஸ்லாத்தை தழுவிய தமிழ் மக்களும் தமது நாட்டில் ஒரு சகோதர இனம் தமது நாட்டு இராணுவத்தால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும்போது  அக மகிழ்ந்து வெற்றிவிளா கொண்டாடினார்கள், அக்காலத்தில் தமிழ் பேசும் இசுலாமியரான ரவூக் கஹீம் ஶ்ரீ லங்காவின் நீதி அமைச்சராக இருந்து உள்ள அரபிய நாட்டுக்கெல்லாம் சென்று தன் நலம் கருதி நடந்த தமிழின அளிப்பை மூடிமறைத்து பிரச்சாரம் செய்த வரலாற்று துரோகத்தை உலகத்தமிழ் மக்கள் நன்கு அறிவார்.

தமிழ் மக்கள் நாம் பிரிந்து சென்று தன்னாட்சி அமைக்கும் உரிமை எமக்குண்டு அது ஒற்றை ஆட்சிக்குள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி தமிழ் மக்கள் தமது பாரம்பரியம் கலாச்சாரம், தமது வழிபாட்டு அடையாளங்கள், விழுமியங்களை கொண்டு பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த வரலாறு உண்டு என்பதை அனைத்து மக்களும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துத்துவம் உருவாகும் முன்னரே சைவ வழிபாடு தமிழ் மக்களின் மரபுவழி வழிபாட்டை அடையாளப்படுத்தி உள்ளதை வரலாறு எமக்கு கற்பித்து நிற்க்கிறது.

வரலாற்றில் தமிழ் மக்கள் ஏமாந்து அழிந்து போனது போதும், சமகாலத்தில் தமிழின அளிப்பை செய்த   சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு செய்த மனித குலத்திற்கு எதிரான இனச்சுத்திகரிப்பை சட்டத்தின் பார்வையில் பார்த்தால் சுயாட்சியை அமைக்கும் தகுதி எமக்கு தமிழ் மக்களுக்கு எல்லாவகையிலும் உண்டு என்பதை சர்வதேச சட்டமும் விடுதலை அடைந்த நாடுகளின் வரலாறும் உறுதிப்படுத்தி நிற்க்கின்றது.

Article I
The Contacting Parties conform that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish.
சமாதான காலத்திலும் யுத்தகாலத்திலும் சர்வதேச சட்ட விதிமுறைகளையெல்லாம் மீறி மனித குலத்திற்கு எதிரான அத்தனை கொடூரத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக ஶ்ரீ லங்கா அரசும் இராணுவமும் செய்தது மட்டுமல்ல சர்வதேச விசாரணையையோ, தலையீட்டை அனுமதிக்கவில்லை.

Article II 
In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or part, a national, ethnical, racial or religious groups, as such: பாதுகாப்பு வலயமென அறிவித்து அந்த இடத்தில் மக்களை இலக்குவைத்து வான் தாக்குதலும், பல்குழல் எறிகணை தாக்குதலும், கொத்தனி குண்டுத தாக்குதலுடன் மட்டும் நிறுத்தவில்லை சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலும் நடத்தி மக்களை கொன்றது மட்டுமல்ல மருத்துவமனையும் தாக்கி அளிக்கப்பட்டது.

(a) killing members of the group; வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் கிறிஸ்த்தவ பாதிரியார் முதல் பொதுமக்கள் சிறுவர்கள் என்ற பாகுடாடு இல்லாது சட்டத்திற்கு மாறாக சுட்டும் சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

(b) causing serious bodily or mental harm to members of the group; சரணடைந்தோர் கைதிகளாக பிடிபட்டோர், சந்தேகத்திற்கு உரியோர் என ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இன்றி சட்டத்திற்குப் புறம்பான வகையில் கொடூரமாக சித்திரவை செய்து படுகொலை செய்தது மட்டுமல்ல பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

(c) deliberately inflicting on the group conditions of life calculated to being about its physical destruction in whole or in part, பலரை கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி பாலியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் உழவியல் ரீதியாகவும் துன்புறுத்தி பலவீனப்படுத்தி ஆரோக்கியம் அற்றவராக்கியமை மட்டுமல்ல அவர்களின் வாழ்நாட்கள் குறுகியதாக்கி பலர் ஒருசில வருடத்தில் இறந்து போனார்கள்.

(d) imposing measures intended to prevent births within the group; 18/05 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் பலர் வலுக்கட்டாயமாக கற்ப்பத்தடை தடுப்பூசி போடப்பட்டார்கள் அது தமிழர்களின் தாய் நிலத்தில்  அவர்களை வீதாசரத்தில் குறைக்கும் நோக்கோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.

(e) possibly transferring children of the group to another group. 2009 ஆண்டில் யுத்தம் முடிந்ததும் யுத்தத்தால் கொல்லப்பட்டு தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் கடத்தப்பட்டார்கள் சிலர் தாய் தந்தையர் இருந்தும் கடத்தப்பட்டு அவர்கள் எங்கே என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இன்றும் பெற்றோர்கள் தேடுகிறார்கள்.

இன்று  ஶ்ரீ லங்கா ஆட்சியாளர்கள் தமது சொந்த இனத்தையே சூரையாடி கொலைசெய்யத் துணியும் பௌத்த சிங்கள அரசுடனும் தமிழின அளிப்பை வெற்றிவிழாவாக கொண்டாடிய சிங்கள மக்களுடனும் சேர்ந்து வாழ்ந்து இதுவரை காலமும் தமிழ் மக்கள் சந்தித்த பொருளாதார இழப்புகள், உயிரிழப்புகள், (தமிழின அளிப்பு ) போதும் எதிர்வரும் காலத்திலாவது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழத்தில் அடுத்த சந்ததியை கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலைப்படுத்தி தமிழர்கள் நாம் சமத்துவமாக கௌரவமாக ஆட்சி அமைப்பதே சாலச் சிறந்தது அதுவே சிங்கள மக்களை மேலும் அவர்களின் கல்வி பொருளாதாரத்தில் உயர்த்திசெல்லும் என்பதை சமகால நிலமை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.


செய்தி தயாரிப்பாளர் 
த தயீசன்
« PREV
NEXT »

No comments