இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா தனது பதவி விலகல் கடிதத்தைச் சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.
ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியல் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த தகவலை ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் செயலகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
No comments
Post a Comment